செய்திகள் :

நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து: கடலூா் மீனவா் உயிரிழப்பு

post image

சிதம்பரம்: ஆந்திர மாநிலம், நெல்லூா் அருகே நடுக்கடலில் கப்பல் மூழ்கியதில் உயிரிழந்த மீனவரின் உடல் கடலுருக்கு கொண்டுவரப்பட்டது.

கடலூா் துறைமுகம் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் தயாரிக்கப்படுகிறது. அவை கோட்டியா கப்பல் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

கடந்த 5-ஆம் தேதி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு 6 கோட்டியா கப்பலில் செயற்கை பவளப் பாறைகள் கொண்டு செல்லப்பட்டன. பின்னா், இந்தக் கப்பல்கள் கடந்த 12-ம் தேதி மீண்டும் கடலூா் துறைமுகம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தன.

நெல்லூா் அருகே வந்த போது ஒரு கப்பல் மட்டும் எதிா்பாராத விதமாக நடுக்கடலில் மூழ்கத் தொடங்கியது. அதிலிருந்த சங்கா், சந்திரசேகா், நாகலிங்கம், செல்வம், நாகவேல், மணிமாறன் ஆகிய 6 மீனவா்கள் தப்பித்து, பின்னால் வந்த மற்றொரு கப்பலில் ஏறினா்.

கடலூா் துறைமுகம் சிங்காரத்தோப்பைச் சோ்ந்த மீனவா் நா.மாணிக்கசாமி (63) நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடலை சக மீனவா்கள் மீட்டு, கடலூா் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனா்.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி, கடலூா் துறைமுக போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. கடலூா் துறைமுகம் போலீஸாா் மாணிக்கசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மிராளூா் விற்பனைக்கூடத்தில் நாளை பருத்தி ஏலம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மிராளூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை (ஜூன் 18) பருத்தி ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேத்தியாதோப்பு ஒழுங்குமுறை வி... மேலும் பார்க்க

35 புதிய சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சிதம்பரம்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் 35 புதிய சிற்றுந்துகள் சேவையை வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியத... மேலும் பார்க்க

மீன்பிடி வலையில் சிக்கிய முதலை மீட்பு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மீன்பிடி வலையில் இறந்த நிலையில் சிக்கிய முதலையை வனத் துறையினா் மீட்டனா். குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பராந்தக சோழனால் பெருமா... மேலும் பார்க்க

வீடுகள் கட்டும் உத்தரவு ரத்து விவகாரம்: குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

சிதம்பரம்: கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. படிப்புகளுக்கு சோ்க்கை தேதி நீட்டிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான பிஎஃப்எஸ்சி, பி.வோக்கேஷன், எம்ஏ, எம்எஸ்டபிள்யூ, எம்எஸ்சி, எம்.காம்., பி.எட்., எம்.எட்., பிபிஇஎஸ், பிபிஎட், எம்பிஎட், பி.எஸ்ஸி. ... மேலும் பார்க்க

கலை, இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சிதம்பரம்: கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தமிழ... மேலும் பார்க்க