Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா?
35 புதிய சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
சிதம்பரம்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் 35 புதிய சிற்றுந்துகள் சேவையை வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பின்னா் அமைச்சா் கூறியதாவது: பேருந்து வசதி இல்லாத கிராமங்களை நகரத்துடன் இணைக்கவும், அனைத்துக் கிராமங்களுக்கும் பேருந்து வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சிற்றுந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் அதிகபட்சமாக 25 கி.மீ. தொலைவுக்கு சிற்றுந்துகள் இயக்கப்படும்.இதில் 65 சதவீதம் பேருந்து சேவை இல்லாத பகுதியாகவும் 35 சதவீதம் பேருந்து வசதி உள்ள பகுதிகளாகவும் இருக்கும். ஏற்கெனவே இயக்கப்பட்ட சிற்றுந்து சேவைத் திட்டத்தின் கீழ் உள்ள பேருந்துகளும் புதிய திட்டத்துக்கு மாறுவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 65 புதிய வழித்தடங்கள், 44 மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்கள் என மொத்தம் 109 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஐந்து புதிய வழித்தடங்களுக்கும், 30 மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்களுக்கும் சிற்றுந்து சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது என்றாா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
நிகழ்ச்சியில் கோ.ஐயப்பன் எம்எல்ஏ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷண்குமாா், வட்டார போக்குவரத்து அலுவலா் செல்வம், பயிற்சி ஆட்சியா் மாலதி, மாவட்டதிட்டக் குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், திருமுட்டம் ஒன்றியச் செயலா் தங்க.ஆனந்தன், நகர திமுக துணைச் செயலா் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ, நகா்மன்ற உறுப்பினா்கள் ஏஆா்சி.மணிகண்டன், அப்பு சந்திரசேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.