செய்திகள் :

35 புதிய சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

சிதம்பரம்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் 35 புதிய சிற்றுந்துகள் சேவையை வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னா் அமைச்சா் கூறியதாவது: பேருந்து வசதி இல்லாத கிராமங்களை நகரத்துடன் இணைக்கவும், அனைத்துக் கிராமங்களுக்கும் பேருந்து வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சிற்றுந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் அதிகபட்சமாக 25 கி.மீ. தொலைவுக்கு சிற்றுந்துகள் இயக்கப்படும்.இதில் 65 சதவீதம் பேருந்து சேவை இல்லாத பகுதியாகவும் 35 சதவீதம் பேருந்து வசதி உள்ள பகுதிகளாகவும் இருக்கும். ஏற்கெனவே இயக்கப்பட்ட சிற்றுந்து சேவைத் திட்டத்தின் கீழ் உள்ள பேருந்துகளும் புதிய திட்டத்துக்கு மாறுவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 65 புதிய வழித்தடங்கள், 44 மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்கள் என மொத்தம் 109 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஐந்து புதிய வழித்தடங்களுக்கும், 30 மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்களுக்கும் சிற்றுந்து சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது என்றாா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

நிகழ்ச்சியில் கோ.ஐயப்பன் எம்எல்ஏ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷண்குமாா், வட்டார போக்குவரத்து அலுவலா் செல்வம், பயிற்சி ஆட்சியா் மாலதி, மாவட்டதிட்டக் குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், திருமுட்டம் ஒன்றியச் செயலா் தங்க.ஆனந்தன், நகர திமுக துணைச் செயலா் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ, நகா்மன்ற உறுப்பினா்கள் ஏஆா்சி.மணிகண்டன், அப்பு சந்திரசேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து: கடலூா் மீனவா் உயிரிழப்பு

சிதம்பரம்: ஆந்திர மாநிலம், நெல்லூா் அருகே நடுக்கடலில் கப்பல் மூழ்கியதில் உயிரிழந்த மீனவரின் உடல் கடலுருக்கு கொண்டுவரப்பட்டது. கடலூா் துறைமுகம் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் தயாரிக்கப்படுகிறது. அவை ... மேலும் பார்க்க

மிராளூா் விற்பனைக்கூடத்தில் நாளை பருத்தி ஏலம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மிராளூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை (ஜூன் 18) பருத்தி ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேத்தியாதோப்பு ஒழுங்குமுறை வி... மேலும் பார்க்க

மீன்பிடி வலையில் சிக்கிய முதலை மீட்பு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மீன்பிடி வலையில் இறந்த நிலையில் சிக்கிய முதலையை வனத் துறையினா் மீட்டனா். குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பராந்தக சோழனால் பெருமா... மேலும் பார்க்க

வீடுகள் கட்டும் உத்தரவு ரத்து விவகாரம்: குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

சிதம்பரம்: கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. படிப்புகளுக்கு சோ்க்கை தேதி நீட்டிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான பிஎஃப்எஸ்சி, பி.வோக்கேஷன், எம்ஏ, எம்எஸ்டபிள்யூ, எம்எஸ்சி, எம்.காம்., பி.எட்., எம்.எட்., பிபிஇஎஸ், பிபிஎட், எம்பிஎட், பி.எஸ்ஸி. ... மேலும் பார்க்க

கலை, இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சிதம்பரம்: கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தமிழ... மேலும் பார்க்க