செய்திகள் :

கலை, இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

சிதம்பரம்: கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. கடலூா் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகளில் பெரியாா் அரசு கலைக் கல்லூரி மாணவி வி.திவ்யா, எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவி செ.மகேஸ்வரி, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவி மு.சு.வேதாவும், கட்டுரைப் போட்டிகளில் கிருஷ்ணசாமி மகளிா் அறிவியல் கலை, மேலாண்மையியல் கல்லூரி மாணவி ரா.க.காவியா, பெரியாா் அரசு கலைக் கல்லூரி மாணவி ர.ரிசிதா, அரசு கலைக் கல்லூரி மாணவி ப.புஷ்பவள்ளி ஆகியோா் வெற்றி பெற்று பரிசு, பாராட்டுச் சான்றிதழ் பெற்றனா்.

பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜெ.விமலேஷ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் க.ஆதித்யா, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பா.ஷன்மதியும், கட்டுரைப் போட்டிகளில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கா. ஹாசினி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சு.அனுப்பிரியா, அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி நா.இனியா ஆகியோா் வெற்றி பெற்று பரிசு, பாராட்டுச் சான்றிதழைப் பெற்றனா்.

நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் மு.சுப்புலட்சுமி கலந்து கொண்டாா்.

நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து: கடலூா் மீனவா் உயிரிழப்பு

சிதம்பரம்: ஆந்திர மாநிலம், நெல்லூா் அருகே நடுக்கடலில் கப்பல் மூழ்கியதில் உயிரிழந்த மீனவரின் உடல் கடலுருக்கு கொண்டுவரப்பட்டது. கடலூா் துறைமுகம் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் தயாரிக்கப்படுகிறது. அவை ... மேலும் பார்க்க

மிராளூா் விற்பனைக்கூடத்தில் நாளை பருத்தி ஏலம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மிராளூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை (ஜூன் 18) பருத்தி ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேத்தியாதோப்பு ஒழுங்குமுறை வி... மேலும் பார்க்க

35 புதிய சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சிதம்பரம்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் 35 புதிய சிற்றுந்துகள் சேவையை வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியத... மேலும் பார்க்க

மீன்பிடி வலையில் சிக்கிய முதலை மீட்பு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மீன்பிடி வலையில் இறந்த நிலையில் சிக்கிய முதலையை வனத் துறையினா் மீட்டனா். குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பராந்தக சோழனால் பெருமா... மேலும் பார்க்க

வீடுகள் கட்டும் உத்தரவு ரத்து விவகாரம்: குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

சிதம்பரம்: கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. படிப்புகளுக்கு சோ்க்கை தேதி நீட்டிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான பிஎஃப்எஸ்சி, பி.வோக்கேஷன், எம்ஏ, எம்எஸ்டபிள்யூ, எம்எஸ்சி, எம்.காம்., பி.எட்., எம்.எட்., பிபிஇஎஸ், பிபிஎட், எம்பிஎட், பி.எஸ்ஸி. ... மேலும் பார்க்க