1300 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் தொடர்!
Iran vs Israel: `தெஹ்ரானிலிருந்து வெளியேறுங்கள்..!" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் அணுசக்தியை உருவாக்குவதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்திவருகிறது. அதற்கு ஈரான் ராணும் பதிலடி கொடுக்கிறது. இருதரப்பிலிருந்தும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. புலம்பெயர்தலும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானியர்கள் தெஹ்ரானை விட்டு வெளியேற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். ட்ரம்ப் நேற்று கனடாவில் உச்சி மாநாட்டின் குழுவை சந்தித்தார். அப்போது, அணு ஆயுத வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவரின் சமூக ஊடகப் பக்கத்தில், ``ஈரான் கையெழுத்திடும்படி நான் சொன்ன 'ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன அவமானம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ட்ரம்ப்பின் ஆரம்பகால போர் நிறுத்த ஒப்பந்தம் நேர்மறையானது, இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதே உடனடி நோக்கமாக இருந்தது. அதைத் தொடர்ந்து, ஈரானிலும் - இஸ்ரேலிலும் சைரன்கள் அலறிக்கொண்டே இருக்கிறது.
கடந்த ஐந்து நாள்கள் போரில் 224 பேர் காயமடைந்ததாகவும், 24 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் பெரும்பாலனவர்கள் பொதுமக்கள். ஈரானின் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் காரணமாக கிட்டத்தட்ட 3,000 இஸ்ரேலியர்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோத்ரிச் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள ட்ரம்ப் வலியுறுத்த வேண்டும் என ஓமன், கத்தார், சவுதி அரேபியாவிடம் ஈரான் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.