செய்திகள் :

Iran vs Israel: `தெஹ்ரானிலிருந்து வெளியேறுங்கள்..!" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

post image

ஈரான் அணுசக்தியை உருவாக்குவதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்திவருகிறது. அதற்கு ஈரான் ராணும் பதிலடி கொடுக்கிறது. இருதரப்பிலிருந்தும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. புலம்பெயர்தலும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானியர்கள் தெஹ்ரானை விட்டு வெளியேற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். ட்ரம்ப் நேற்று கனடாவில் உச்சி மாநாட்டின் குழுவை சந்தித்தார். அப்போது, அணு ஆயுத வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்திருப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

மேலும் அவரின் சமூக ஊடகப் பக்கத்தில், ``ஈரான் கையெழுத்திடும்படி நான் சொன்ன 'ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன அவமானம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ட்ரம்ப்பின் ஆரம்பகால போர் நிறுத்த ஒப்பந்தம் நேர்மறையானது, இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதே உடனடி நோக்கமாக இருந்தது. அதைத் தொடர்ந்து, ஈரானிலும் - இஸ்ரேலிலும் சைரன்கள் அலறிக்கொண்டே இருக்கிறது.

கடந்த ஐந்து நாள்கள் போரில் 224 பேர் காயமடைந்ததாகவும், 24 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் பெரும்பாலனவர்கள் பொதுமக்கள். ஈரானின் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் காரணமாக கிட்டத்தட்ட 3,000 இஸ்ரேலியர்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோத்ரிச் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள ட்ரம்ப் வலியுறுத்த வேண்டும் என ஓமன், கத்தார், சவுதி அரேபியாவிடம் ஈரான் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கீழடி: "எத்தனை எத்தனை தடைகள்... திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை" - ஸ்டாலின்

சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வு குறித்த ஆய்வறிக்கையை 2023-லேயே இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணனால் ச... மேலும் பார்க்க

கீழடி: "போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது?" - பாஜகவைச் சாடும் சு.வெ

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படை... மேலும் பார்க்க

முருகன் மாநாடு: `எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் பங்கேற்போம்’ - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடந்த கட்டுமானப்பணி பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற குற்ற ... மேலும் பார்க்க

Gaza: 'உணவுக்காக கையேந்தியவர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்' - என்ன நடந்தது?

இஸ்ரேல் படைகள் காசாவில் 59 பொது மக்களை சுட்டுக்கொன்றதாகவும், அதில் குறைந்தது 17 பேர் உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது கொல்லப்பட்டதாகவும் அல்ஜசீரா செய்தி ஊடகம் தெரிவிக்கிறது. இஸ்ரேல் -... மேலும் பார்க்க

'இரக்கமற்ற நெதன்யாகுவுக்கு இரையாகும் ஈரான்' - பேராசிரியர் ரெஸா தலேபியின் அரசியல் பார்வை

ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் பல்கலைக்கழகத்தின் ஓரியன்டல் மற்றும் மத ஆய்வுகள் துறை பேராசிரியர் ரெஸா தலேபி (Reza Talebi), குளோபல் வாய்சஸ் தளத்தில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.மரணத்தின் விளிம்பில் நீங்... மேலும் பார்க்க

மதுரை: `விவசாய நிலத்தில் கிரஷர் குவாரி; எதிர்த்தால் மிரட்டல்..' - கலெக்டரிடம் புகாரளித்த விவசாயிகள்!

"கிரஷர் குவாரி அமைக்கப்பட்டால் எங்கள் பகுதியில் விவசாயம் முழுமையாக அழியும், நிலத்தடி நீர் கிடைக்காமல் போய்விடும், கிரஷர் உரிமையாளரின் மிரட்டலால் ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்..." என கிர... மேலும் பார்க்க