செய்திகள் :

மதுரை: `விவசாய நிலத்தில் கிரஷர் குவாரி; எதிர்த்தால் மிரட்டல்..' - கலெக்டரிடம் புகாரளித்த விவசாயிகள்!

post image

"கிரஷர் குவாரி அமைக்கப்பட்டால் எங்கள் பகுதியில் விவசாயம் முழுமையாக அழியும், நிலத்தடி நீர் கிடைக்காமல் போய்விடும், கிரஷர் உரிமையாளரின் மிரட்டலால் ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்..." என கிராம மக்கள் மதுரை கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.

குவாரி (மாதிரிப் படம்)

மதுரை மாவட்டம், விராதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குசவப்பட்டி, காஞ்சிரங்குளம் பகுதிகளில் கிரஷர் குவாரி அமைப்பதற்கு கனிமவளத்துறை சார்பில் தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அந்தப் பகுதியில் கிரஷர் குவாரி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் குசவப்பட்டி, காஞ்சிரங்குளம் பகுதிகளில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் வீணாகி சேதம் அடைந்து வருகின்றன. தூசி வெளியேறுவதால் மக்கள் வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது. நிலத்தடி நீரும் பாதாளத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்கள் விவசாயம் பாதிக்கப்படுவதாக ஏற்கெனவே போராட்டம் நடத்தி, காவல்துறையில் புகார் அளித்தபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கிரஷர் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்யக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

கலெக்டரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்

பின்பு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், "எங்கள் கிராமங்களில் உள்ள விவசாயப் பகுதிகளுக்கு அருகே கிரஷர் குவாரிக்கு அனுமதி கொடுத்துள்ளனர். பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் கீழே சென்று விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். ஏற்கெனவே பயிரிடப்பட்ட மல்லிகை, கரும்பு, வாழை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டால் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்

இதுகுறித்து கிரஷ்ஷர் காரர்களிடம் கேட்டால், தாங்கள் ஆளுங்கட்சி என்று மிரட்டுகிறார்கள். கிரஷர் வெட்டியுள்ள பகுதிகளை சுற்றி கற்களை நட்டதை கேட்டதற்கு தாக்க முயன்றனர். இன்னொரு பக்கம், காவல்துறையினர் எங்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து மிரட்டுகிறார்கள். அதுமட்டுமன்றி பஞ்சமி நிலத்தையும் கையகப்படுத்தி குவாரி நடத்தி வருகிறார்கள். இது குறித்து ஏதாவது புகார் அளித்தால் லாரி ஏற்றி கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி வருகின்றனர். எனவே கலெக்டர்தான் உரிய நடவடிக்கை எடுத்து கிரஷர் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்" என்றனர்.

கீழடி: "எத்தனை எத்தனை தடைகள்... திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை" - ஸ்டாலின்

சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வு குறித்த ஆய்வறிக்கையை 2023-லேயே இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணனால் ச... மேலும் பார்க்க

கீழடி: "போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது?" - பாஜகவைச் சாடும் சு.வெ

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படை... மேலும் பார்க்க

முருகன் மாநாடு: `எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் பங்கேற்போம்’ - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடந்த கட்டுமானப்பணி பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற குற்ற ... மேலும் பார்க்க

Gaza: 'உணவுக்காக கையேந்தியவர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்' - என்ன நடந்தது?

இஸ்ரேல் படைகள் காசாவில் 59 பொது மக்களை சுட்டுக்கொன்றதாகவும், அதில் குறைந்தது 17 பேர் உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது கொல்லப்பட்டதாகவும் அல்ஜசீரா செய்தி ஊடகம் தெரிவிக்கிறது. இஸ்ரேல் -... மேலும் பார்க்க

'இரக்கமற்ற நெதன்யாகுவுக்கு இரையாகும் ஈரான்' - பேராசிரியர் ரெஸா தலேபியின் அரசியல் பார்வை

ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் பல்கலைக்கழகத்தின் ஓரியன்டல் மற்றும் மத ஆய்வுகள் துறை பேராசிரியர் ரெஸா தலேபி (Reza Talebi), குளோபல் வாய்சஸ் தளத்தில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.மரணத்தின் விளிம்பில் நீங்... மேலும் பார்க்க

`முருகன் இருக்கும் மலைகளெல்லாம் இந்துக்களுக்கு சொந்தமானது!' - புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

மதுரையில் வரும் ஜூன் 22 அன்று இந்து முன்னணி சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் கண்காட்சி தொடங்கப்பட்டது, இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிர... மேலும் பார்க்க