செய்திகள் :

எய்ம்ஸ் குறித்து கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியீடு: முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னவானது என்று கேள்வி கேட்டதால், கற்பனை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மதுரை வந்த உள்துறை அமைச்சரிடம், எய்ம்ஸ் என்னவானது எனக் கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும், 2026 தமிழக பேரவைத் தேர்தலுக்கு இதுபோதும் என்று நினைத்துவிட்டார்களா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமாண விடியோ இன்று காலை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ஹெலிகாப்டர் இறங்குதளம், குறுங்காடு என பல வசதிகளுடன் அமையவிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விடியோவை இணைத்து இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

மதுரைக்கு வந்த மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் எய்ம்ஸ் என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.

அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள்.

2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா?

இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையாதது குறித்து தமிழகத்தில் அவ்வப்போது விவாதங்கள் எழும் நிலையில், மருத்துவமனையின் முப்பரிமாண மாதிரிப் படம் வெளியாகியிருந்தது.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

20 மணி நேரம்! ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நிறைவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமிடம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில் திருமணம் செய... மேலும் பார்க்க

தமிழக அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும்: விஜய்

தமிழக அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:சாதிவார... மேலும் பார்க்க

தென்காசி முதியோர் காப்பகத்தில் பலி 5 ஆக உயர்வு!

தென்காசி மாவட்டத்தில் முதியோர் காப்பகத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு சாப்பிட்ட விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் இறந்த நிலையில் மேலும் ஒருவர் இன்று(செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார். தென்காசி மாவட்டம், சுரண்டை ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை பெய்யும்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை உள்பட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதா... மேலும் பார்க்க

வார விடுமுறை நாள்கள்: நெல்லைக்கு சிறப்பு ரயில்!

சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் ஜூன் 21 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்ப... மேலும் பார்க்க