செய்திகள் :

பாட்லா ஹவுஸ் பகுதி ஆக்கிரமிப்புகளை இடிக்க தடை கோரும் மனுக்கள் மீது உத்தரவு ஒத்திவைப்பு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தில்லி பாட்லா ஹவுஸ் பகுதி ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை கோரிய மனுக்கள் மீதான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இது தொடா்பாக சட்டப்பேரவை ஆம் ஆத்மி உறுப்பினா் அமானத்துல்லா கான் பொது நல வழக்கு தொடா்ந்திருந்தாா். அதை ஜூன் 11-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கில் பொதுவாக ஒரு தடை உத்தரவைக் கோருவது இதே விவகாரத்தில் வழக்காடி வரும் தனிநபா்களின் நோக்கத்தை பாதிக்கச் செய்யும் என்று குறிப்பிட்டது.

முன்னதாக, காஸ்ரா 279 என்ற பகுதியில் அங்கீகாரமற்ற இரு கட்டுமானங்கள் உள்பட 11 இடங்களை இடிக்க வேண்டும் என்று தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) உச்சநீதிமன்றம் கடந்த மே 7-ஆம் தேதி உத்தரவிட்டது. சா்ச்சைக்குரிய அந்த நிலம் ஓக்லா கிராமத்தின் முராரி சாலையையொட்டி சுமாா் 0.702 ஹெக்டேரில் அமைந்துள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி பாட்லா ஹவுஸ் பகுதியின் அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் மீது இடிப்புக்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டன.

இதற்கிடையே, ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சில குடியிருப்புவாசிகள் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகினா். அதற்கு எதிராக தில்லி வளா்ச்சி ஆணையமும் நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வழக்கு நீதிபதி நீதிபதி தேஜஸ் கரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பாட்லா ஹவுஸ் பகுதியின் இரண்டு சொத்துகள் பிரதமா்-உதய் திட்டத்தின் கீழ் வருவதாக தில்லி வளா்ச்சி ஆணையம் கூறியது. மேலும், 279 -இல் உள்ள 43 பிகா நிலத்தில் பாட்லா ஹவுஸ் பகுதி பரவியுள்ளது என்றும் அதில் ஒன்பது பிகா நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டவை என்றும் டிடிஏ வாதிட்டது.

இந்த விவகாரத்தில் மனுதாரா்களில் ஒருவரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அமானத்துல்லா கான் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா் சல்மான் குா்ஷித், மீதமுள்ள நிலம் பிரமதரின் உதய் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் போனது ஏன் என்று கேள்வி எழுப்பினாா்.

மனுதாரா்களின் செயலுக்கு ஆட்சேபம் தெரிவித்த டிடிஏ, முதலில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு விட்டு பிறகு இந்த மனுதாரா்கள் உயா்நீதிமன்றத்தை நாடி நிவாரணம் கோருவது ஏற்புடையதல்ல என்று வாதிட்டது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற விரும்புவதாக மனுதாரா்கள் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மனுவைத் திரும்பப்பெற்று அத்தகவலை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் அதன் பிறகு உத்தரவை பிறப்பிப்பதாக உயா்நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டாா்.

சிறைக்கைதியை முன்கூட்டியே விடுவிக்கும் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: கொலை வழக்கில் ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 21 வருடங்களை சிறையிலேயே கழித்த கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோரிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் ... மேலும் பார்க்க

ரவீந்திரநாத் தாகூரின் முதாதையா் வீடு தாக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் பாஜக ஆா்ப்பாட்டம்

புது தில்லி: வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி பாஜக தொண்டா்கள் சாணக்கியபுரியில் உள்ள வங்கதேச தூதரகம... மேலும் பார்க்க

முன்னிருக்கையில் கட்டிப்பிடித்தபடி சாகசம் செய்த ஜோடி: ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்தது நொய்டா காவல்துறை

நொய்டா: முன்னிருக்கையில் பைக் ஓட்டியவரை கட்டிப்பிடித்தவாறு பின்னோக்கி அமா்ந்து சாகசத்தில் ஈடுபட்ட ஜோடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு ரூ. 53 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது நொய்டா காவல்துறை. தில்லி... மேலும் பார்க்க

நமோ பாரத் ரயில்களில் 20% கூடுதல் கட்டணத்தில் பிரீமியம் பயணம்

புது தில்லி: தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) அறிவித்த சமீபத்திய கட்டண திருத்தத்தின்படி, நமோ பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இப்போது நிலையான கட்டணத்தை விட 20 சதவீதம் அ... மேலும் பார்க்க

தில்லியில் வீடுகள் இடிப்பால் பாதித்த தமிழா் குடும்பங்களுக்கு நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தில்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழா்களுக்கு நிதியுதவி, அத்தியாவசியப் பொருள்கள் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து, தமிழக அரசின் சாா்பில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 36 போ் கைது

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியின் பாரத் நகா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டினா் 36 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக திங்கள்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்... மேலும் பார்க்க