செய்திகள் :

மூன்று சூப்பர் ஓவர்கள்; டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை!

post image

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.

நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடர் நேற்று முன் தினம் (ஜூன் 15) தொடங்கியது.

இந்த தொடரில் நேற்று (ஜூன் 16) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது.

இதையும் படிக்க: பிரதமருக்கு அடுத்து செல்வாக்கு மிகுந்த நபர்கள் வரிசையில் ஷுப்மன் கில்: ஜோஸ் பட்லர்

3 சூப்பர் ஓவர்கள்; டி20 வரலாற்றில் முதல் முறை

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், ஆட்டம் டை ஆகி சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

சூப்பர் ஓவரில் நேபாளம் 19 ரன்கள் எடுக்க, நெதர்லாந்து அணியும் 19 ரன்கள் எடுக்க ஆட்டம் மீண்டும் டை ஆனது. இதனால், இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 17 ரன்கள் எடுக்க, நேபாளத்துக்கு 18 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேபாளம் அணி 17 ரன்கள் மட்டும் எடுக்க இரண்டாவது முறையும் சூப்பர் ஓவர் டை ஆனது. இதனையடுத்து, மூன்றாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

இதையும் படிக்க: 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய திக்வேஷ் ரதி..! லக்னௌ அணி உரிமையாளர் பகிர்ந்த விடியோ!

மூன்றாவது சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நேபாளம் 0 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஸாச் லயன் கேச்ட் ரன்கள் கொடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி நேபாளத்தை வீழ்த்தியது.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம்: ஷர்துல் தாக்குர்

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் ... மேலும் பார்க்க

டெஸ்ட் கேப்டன் பொறுப்பை நிராகரித்த பும்ரா..! என்ன நடந்தது?

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை தான் நிராகரித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி விலகியதால் புதிய... மேலும் பார்க்க

சிங்கத்தின் குகைக்குள் செல்லும் ஷுப்மன் கில்; தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் இந்திய அணியை வழிநடத்தவுள்ள ஷுப்மன் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க

மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு மரியாதை..! வங்கதேச வீரர்கள் இருவர் சதம்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஓய்வுபெறவிருக்கும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் மரியாதை செலுத்தினர்.இலங்கை காலே திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் வங்கதேசம் முதல்... மேலும் பார்க்க

அவரது பெயர் டெம்பா..! கேப்டனுக்காக பாடல் பாடிய தெ.ஆ. வீரர்கள்!

டபிள்யூடிசியை வென்ற கேப்டனுக்காக தென்னாப்பிரிக்க வீரர்கள் பாடல் பாடிய விடியோ வைரலாகி வருகிறது. நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்கா வென்றது. 27 ஆண்... மேலும் பார்க்க

பிரதமருக்கு அடுத்து செல்வாக்கு மிகுந்த நபர்கள் வரிசையில் ஷுப்மன் கில்: ஜோஸ் பட்லர்

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்... மேலும் பார்க்க