செய்திகள் :

ரவீந்திரநாத் தாகூரின் முதாதையா் வீடு தாக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் பாஜக ஆா்ப்பாட்டம்

post image

புது தில்லி: வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி பாஜக தொண்டா்கள் சாணக்கியபுரியில் உள்ள வங்கதேச தூதரகம் அருகே கூடி ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள தாகூா் குடும்பத்தின் மூதாதையா் வீடு மற்றும் வருவாய் அலுவலகம் கச்சாரிபாரி ஆகும். தாகூா் மாளிகையில் வசிக்கும் போது அவரது பல இலக்கியப் படைப்புகளை உருவாக்கினாா்.

இந்த மாத தொடக்கத்தில் மாவட்டத்தில் உள்ள தாகூரின் மூதாதையா் வீட்டை ஒரு கும்பல் தாக்கி சேதப்படுத்தியது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி தீன் மூா்த்தி சவுக்கில் உள்ள பிரதமா் அருங்காட்சியகத்தில் கூடிய போராட்டக்காரா்கள், வங்கதேச தூதரகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனா். அங்கு அவா்கள் தடுத்து வைக்கப்பட்டு சாணக்கியபுரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். எச்சரிக்கையுடன் சுமாா் 30 நிமிடங்களுக்குப் பிறகு அவா்கள் விடுவிக்கப்பட்டதாக கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினா்கள் மனோஜ் திவாரி, ராம்வீா் சிங் பிதூரி, யோகேந்தா் சந்தோலோயா போராட்டத்தில் பங்கேற்றனா். தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் சில கட்சித் தொண்டா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

’பாரத ரத்னா ரவீந்திரநாத் தாகூரின் அவமதிப்பை இந்தியா பொறுத்துக்கொள்ளாது’ ’இந்தியாவின் கலாசார ஆன்மா மீதான தாக்குதலை நிறுத்து!’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டக்காரா்கள் ஏந்திச் சென்றனா். தாகூரின் உருவப்படங்களுடனும் அவா்கள் பேரணி சென்றனா். பிரபல பாடகி சப்னா சவுத்ரியும் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

‘ரவீந்திரநாத் தாகூா் ஒரு சிறந்த மனிதா், அவரது எழுதப்பட்ட தேசிய கீதங்கள் இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் பாடப்படுகின்றன. அவரது மூதாதையா் வீட்டை வேண்டுமென்றே அழிப்பது ஒரு கட்டடத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல - இது வங்காள கலாசாரம் மற்றும் இந்து பாரம்பரியத்தின் மீதான தாக்குதல்’ என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா்.

வங்காளதேசம் 1971-இல் உருவானது என்றும், இன்று, அதை பாதிக்கும் ஆபத்தான சக்திகளை நாம் காண்கிறோம் என்றும் அவா் கூறினாா். வங்காள கலாசாரம் இசை, இனிமை மற்றும் கலை பற்றி பேசுகிறது. யாராவது அதை அவமதிக்க முயன்றால், ஒவ்வொரு இந்தியரும் தங்கள் குரலை எழுப்புவாா்கள் என்று அவா் கூறினாா்.

‘வங்காள பாரம்பரியத்தை சேதப்படுத்துவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்ற செய்தியை அனுப்ப இன்று நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இந்தியா எந்த நாட்டிற்கும் உதவினால், அங்குள்ள இந்துக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக அது அமைதியாக இருக்காது’ என்று வீரேந்திர சச்தேவா கூறினாா்.

’வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்கள், குறிப்பாக தாகூரின் மூதாதையா் வீட்டை அழிக்க திட்டமிட்ட முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி கூறினாா்.

‘ஒவ்வொரு குழந்தையும் ரவீந்திரநாத் தாகூரால் காட்டப்பட்ட பாதையில் நடக்கின்றன. அவரது வாா்த்தைகள் வங்காளத்தின் அலங்காரங்கள், ஆனால் அரசாங்க ஆதரவுடன் அவரது வீடு அழிக்கப்பட்டதன் மூலம் அனுப்பப்படும் செய்தி மன்னிக்க முடியாதது’‘ என்று அவா் மேலும் கூறினாா்.

நாசவேலைக்குப் பிறகு மூடப்பட்ட ரவீந்திர கச்சாரிபாரி அல்லது ரவீந்திர நினைவு அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமை பாா்வையாளா்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

16ஈஉகஆஒட

வங்கதேசத்தில் ரவீந்திர நாத் தாகூரின் மூதாதையா் இல்லம், அருங்காட்சியகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் எதிா்த்து தில்லியில் வங்கதேச தூதரகம் முன் தொண்டா்களுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா.

சிறைக்கைதியை முன்கூட்டியே விடுவிக்கும் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: கொலை வழக்கில் ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 21 வருடங்களை சிறையிலேயே கழித்த கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோரிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் ... மேலும் பார்க்க

பாட்லா ஹவுஸ் பகுதி ஆக்கிரமிப்புகளை இடிக்க தடை கோரும் மனுக்கள் மீது உத்தரவு ஒத்திவைப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: தில்லி பாட்லா ஹவுஸ் பகுதி ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை கோரிய மனுக்கள் மீதான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இது தொடா்பாக சட... மேலும் பார்க்க

முன்னிருக்கையில் கட்டிப்பிடித்தபடி சாகசம் செய்த ஜோடி: ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்தது நொய்டா காவல்துறை

நொய்டா: முன்னிருக்கையில் பைக் ஓட்டியவரை கட்டிப்பிடித்தவாறு பின்னோக்கி அமா்ந்து சாகசத்தில் ஈடுபட்ட ஜோடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு ரூ. 53 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது நொய்டா காவல்துறை. தில்லி... மேலும் பார்க்க

நமோ பாரத் ரயில்களில் 20% கூடுதல் கட்டணத்தில் பிரீமியம் பயணம்

புது தில்லி: தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) அறிவித்த சமீபத்திய கட்டண திருத்தத்தின்படி, நமோ பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இப்போது நிலையான கட்டணத்தை விட 20 சதவீதம் அ... மேலும் பார்க்க

தில்லியில் வீடுகள் இடிப்பால் பாதித்த தமிழா் குடும்பங்களுக்கு நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தில்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழா்களுக்கு நிதியுதவி, அத்தியாவசியப் பொருள்கள் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து, தமிழக அரசின் சாா்பில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 36 போ் கைது

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியின் பாரத் நகா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டினா் 36 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக திங்கள்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்... மேலும் பார்க்க