ஈரான் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்..! -டிரம்ப்
இஸ்ரேல்–ஈரான் மோதல்: பங்குச் சந்தை சரிவுடன் முடிவு!
மும்பை: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தது நேற்று பங்குகளை வாங்கியதால், நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தை வெகுவாக உயர்ந்த முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ய முயன்றதால் ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து தொடங்கிய நிலையில் முடிவில் சரிந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 369.14 புள்ளிகள் சரிந்து 81,427.01 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ குறியீடான சென்செக்ஸ் 212.85 புள்ளிகள் சரிந்து 81,583.30 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 93.10 புள்ளிகள் அல்லது 0.37 சதவிகிதம் சரிந்து 24,853.40 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் சன் பார்மா, எடர்னல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை சரிந்த நிலையில் கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.
நிஃப்டி-யில் அதானி எண்டர்பிரைசஸ், டாக்டர் ரெட்டி லேப்ஸ், சன் பார்மா, எடர்னல், ஓஎன்ஜிசி ஆகியவை அதிக உயர்ந்த நிலையில் டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ், மாருதி சுசுகி ஆகியவை உயர்ந்து முடிந்தன.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5 சதவிகிதம் சரிந்து வர்த்தகமாயின.
ஐடி தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிவடைந்தன. உலோக குறியீடு 1 சதவிகிதம் சரிந்தன, அதே நேரத்தில் ஆட்டோ, நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை வங்கி ஆகியவை தலா 0.5 சதவிகிதம் சரிந்து முடிந்தன.
துறை ரீதியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருந்துகள் மீதான கட்டணங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியதையடுத்து மருந்து துறை குறியீடு 2 சதவிகிதம் சரிந்து முடிந்தன.
ஐரோப்பிய நிறுவனத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் ஆக்சிஸ்கேட்ஸ் டெக்னாலஜிஸ் 5% உயர்ந்த நிலையில் விஷால் மெகா மார்ட் ரூ.10,488 கோடி மதிப்புள்ள பங்குகள் பரிமாற்றம் நடைபெற்றதால் அதன் பங்குகள் 4% உயர்ந்தன.
33% பிரீமியத்தில் ரூ.175 கோடி திரும்பப் பெறுவதற்கு வாரியம் ஒப்புதல் அளித்த பிறகு தன்லா பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் 2% அதிகரித்தது. சூரிய ஒளி திட்டங்களை நிறுவுவதற்கான ரூ.474 கோடி ஆர்டரைப் பெற்றதால் ராம் இன்ஃபர்மேடிக்ஸ் பங்கின் விலை 20 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தன.
மகாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ், நவின் ஃப்ளோரின், ஆதித்யா பிர்லா கேபிடல், இன்டலெக்ட் டிசைன், சோலார் இண்டஸ்ட்ரீஸ், முத்தூட் ஃபைனான்ஸ், லாயிட்ஸ் மெட்டல்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், லாரஸ் லேப்ஸ் உள்ளிட்ட 80 பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.
ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி மற்றும் ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு உயர்ந்து வர்த்தகமான நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்த வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள் மத்திய நேர வர்த்தகத்தில் சரிந்து வர்த்தகமானது. நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.69 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 74.47 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.2,539.42 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
இதையும் படிக்க: ரூ.1500 கோடி செலவில் வீட்டுவசதி திட்டத்தை அறிமுகம் செய்யும் கோத்ரெஜ் பிராபர்டீஸ்!