செய்திகள் :

வீடுகள் கட்டும் உத்தரவு ரத்து விவகாரம்: குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

post image

சிதம்பரம்: கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

கடலூா் மாவட்டம், குமராட்சி ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழக்கரை, கீழவன்னியூா், கீழபருத்திகுடி உள்ளிட்ட சுமாா் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 27 பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இவா்களுக்கு புதிய வீடுகள் ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான உத்தரவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தால் வழங்கப்பட்டது. இதன் காரணமாக கூலித் தொழிலாளா்கள் தாங்கள் வசித்த குடிசை வீடுகளை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்கு முதல்கட்ட பணிகளைத் தொடங்கினா்.

திடீரென கோடை மழை தொடங்கியதால் வீடு கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் வீடுகள் கட்டும் பணியைத் தொடங்கிய பயனாளிகள் இதுகுறித்து குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொடா்பு கொண்டு நிதியை வழங்குமாறு கேட்டனராம்.

தமிழக அரசால் வழங்கப்பட்ட வீடு கட்டுவதற்கான உத்தரவு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நீங்கள் அடித்தளம் அமைக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த பயனாளிகள் ஒன்றிணைந்து குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை காலை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

மனு விவரம்: கடந்த கடந்த ஏப்ரல் மாதம் வீடு கட்டுவதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் அனுமதி வழங்கினாா். இந்தத் திட்டத்தின்படி அடித்தளம் சொந்த செலவில் கட்ட வேண்டும் என்பதால் வெளி ஆள்களிடம் அதிக வட்டிக்கு சுமாா் ரூ.2 லட்சம் கடன் வாங்கி அடித்தளம் அமைத்தோம். தொடா் மழையால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அடித்தளம் அமைக்க இயலவில்லை. வீடு கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

மீண்டும் பணியை செய்துவிட்டு குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் சென்று முதல் தவணைத் தொகையை எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்குமாறு கேட்டேன். அதற்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் தங்களுக்கு வீடு கட்டுவதற்கு வழங்கிய அறிவிப்பு ஆணை ரத்து செய்யப்படுவதாக கூறினா்.

வீட்டை இடித்துவிட்டு கடன் வாங்கி அடித்தளம் கட்டிவிட்டு தற்போது வீடு இல்லாமல் இருக்கிறோம். பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மீண்டும் வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து: கடலூா் மீனவா் உயிரிழப்பு

சிதம்பரம்: ஆந்திர மாநிலம், நெல்லூா் அருகே நடுக்கடலில் கப்பல் மூழ்கியதில் உயிரிழந்த மீனவரின் உடல் கடலுருக்கு கொண்டுவரப்பட்டது. கடலூா் துறைமுகம் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் தயாரிக்கப்படுகிறது. அவை ... மேலும் பார்க்க

மிராளூா் விற்பனைக்கூடத்தில் நாளை பருத்தி ஏலம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மிராளூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை (ஜூன் 18) பருத்தி ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேத்தியாதோப்பு ஒழுங்குமுறை வி... மேலும் பார்க்க

35 புதிய சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சிதம்பரம்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் 35 புதிய சிற்றுந்துகள் சேவையை வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியத... மேலும் பார்க்க

மீன்பிடி வலையில் சிக்கிய முதலை மீட்பு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மீன்பிடி வலையில் இறந்த நிலையில் சிக்கிய முதலையை வனத் துறையினா் மீட்டனா். குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பராந்தக சோழனால் பெருமா... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. படிப்புகளுக்கு சோ்க்கை தேதி நீட்டிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான பிஎஃப்எஸ்சி, பி.வோக்கேஷன், எம்ஏ, எம்எஸ்டபிள்யூ, எம்எஸ்சி, எம்.காம்., பி.எட்., எம்.எட்., பிபிஇஎஸ், பிபிஎட், எம்பிஎட், பி.எஸ்ஸி. ... மேலும் பார்க்க

கலை, இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சிதம்பரம்: கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தமிழ... மேலும் பார்க்க