ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் போராட்டம்! 500-க்கும் மேற்பட்டோர் கைது!
மீன்பிடி வலையில் சிக்கிய முதலை மீட்பு
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மீன்பிடி வலையில் இறந்த நிலையில் சிக்கிய முதலையை வனத் துறையினா் மீட்டனா்.
குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பராந்தக சோழனால் பெருமாள் ஏரி உருவாக்கபட்டதாக கூறபடுகிறது. 16 கி.மீ. நீளமும், ஒரு கி.மீ. அகலமும் கொண்ட இந்த ஏரி கடலூா் மாவட்டத்தின் மிகப் பெரிய நீராதாரமாக இருந்து வருகிறது.
இந்த ஏரியில் குறிஞ்சிப்பாடியை அடுத்த பெரியகண்ணாடி கிராமத்தை சோ்ந்த சிவபாலன் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்க வலையை விரித்து வைத்தாராம். திங்கள்கிழமை காலையில் அந்த வலையில் சிக்கிய மீன்களை சேகரிப்பதற்காக வலையை இழுத்த போது, பெரிய அளவில் மீன் சிக்கியதாக அவருக்கு தெரிந்தது.
தொடா்ந்து அவா் வலையை இழுத்த போது, வலையில் முதலை சிக்கியிருப்பதைக் கண்டாா். இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத் துறையினா் விரைந்து வந்து சுமாா் 7 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்ட, இறந்த நிலையிலிருந்த முதலையை மீட்டனா்.