செய்திகள் :

ஷீரடி: "பிறந்தநாள் கொண்டாடப் பணமில்லை" - விவசாயியைக் கடத்திக் கொன்று, போனை திருடிய மைனர் சிறார்கள்

post image

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி அருகில் உள்ள சஷ்னாலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (42). விவசாயியான இவர் கடந்த 8ம் தேதி அருகில் உள்ள சகோரி என்ற கிராமத்திற்குச் சென்றார்.

அங்கிருந்து மாலை நேரத்தில் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பினார். அவரை மூன்று மைனர் சிறார்கள் பின் தொடர்ந்து வந்து மடக்கி கணேஷிடம் இருந்த மொபைல் போனை கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் போனை கொடுக்கவில்லை.

தாக்குதல்
தாக்குதல்

அந்நேரம் மைனர் சிறார்கள் போன் செய்து தனது நண்பர்கள் சிலரைச் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கணேஷை அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் கடத்திச்சென்று அடித்து உதைத்தனர்.

ஒருவர் விவசாயி கழுத்தை நெரித்தார். மற்றொருவர் கத்தியால் விவசாயியைக் கத்தியால் குத்தினார். பின்னர் அவர்கள் விவசாயியிடம் இருந்த மொபைல் போனை எடுத்துக்கொண்டு காயம் அடைந்தவரை அப்படியே கரும்பு தோட்டத்திற்குள் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

கணேஷ் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரைக் காணவில்லை என்று ஏற்கனவே அவரது உறவினர்கள் புகார் கொடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் கணேஷ் உடல் அடையாளம் காணப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில் கழுத்தை நெரித்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் கணேஷ் மொபைல் போன் எங்கிருக்கிறது என்று தெரிய வந்தது. அப்போனை வைத்திருந்த நபரிடம் விசாரித்தபோது அந்த போனை ரூ.4500 கொடுத்து வாங்கியதாகத் தெரிவித்தார். போனை விற்பனை செய்தது ஒரு மைனர் ஆகும். அவரைப் பிடித்து விசாரித்தபோது அனைத்து உண்மைகளும் தெரிய வந்தது. 6 மைனர் சிறார்கள் உட்பட 7 பேர் சேர்ந்து இக்கொலையைச் செய்துள்ளனர்.

Murder
Murder

இது குறித்து ஆய்வாளர் ரஞ்சித் கூறுகையில், ''கொலையாளிகளில் ஒருவரான 15 வயது மைனருக்குப் பிறந்தநாள் கொண்டாடப் பணம் இல்லை. எனவே 15 வயது நபரும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து விவசாயியை அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் கடத்தி சென்று கொலை செய்துள்ளனர்.

விவசாயியிடம் இருந்த மொபைல் போனை விற்று பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாடிய 15 வயது நபர்தான் கத்தியால் குத்தியுள்ளார்'' என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

கடலூர்: 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸார்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மணிமேகலை (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினம்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகளும், புலவனூர... மேலும் பார்க்க

கடலூர்: 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் - ஆபத்தான நிலையில் சிகிச்சை

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மணிமேகலை (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினம்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகளும், புலவனூர... மேலும் பார்க்க

கடனுக்காக பெண்ணை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்; கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு- என்ன நடந்தது?

ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்தது குறித்து முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சித... மேலும் பார்க்க

`உண்மையாகக் காதலித்தால் உயிரைக்கொடு' காதலை நிரூபிக்க விஷம் குடித்தாரா வாலிபர்? - போலீஸ் விசாரணை

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் அரசின் ஆலோசனை எண்ணிற்கு அழைத்துப் பேசுவது சரியான தீர்வுபீகார் மாநிலத்தில் உள்ள பன்கா மாவட்டத்தில், அமர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்சே மண்ட... மேலும் பார்க்க

இளம்பெண் மாயமான வழக்கு; சாமியார் போட்ட திட்டம்; 8 மாதங்களுக்குப் பின் கொலைகும்பல் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், பழவூர் அருகிலுள்ள மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரின் மகள் கயல்விழி. இவருக்குத் திருமணமாகி, கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந... மேலும் பார்க்க

ஒடிசா: கூட்டு பாலியல் வன்கொடுமை; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; 7 பேர் கைது

ஒடிசா மாநிலத்தில் 'பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் அழுக்கானது அல்ல' என்பதை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் Raja Parba என்ற விழா கொண்டாடப்படுகிறது மூன்று முதல் நான்கு நாள்வரை கொண்டாடப்படும் இந்தவிழாவி... மேலும் பார்க்க