செய்திகள் :

ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் போராட்டம்! 500-க்கும் மேற்பட்டோர் கைது!

post image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபாட்டு உரிமையை மீட்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கிய பிரமுகர்களும், உள்ளுர் மக்களும் தரிசனம் செய்ய தனி வழி உள்ளது. இந்த நிலையில், தற்போது புதிதாக கோயில் இணை ஆணையர் செல்லத்துரை பொறுப்பேற்றுள்ளார்.

இவர், உள்ளுர் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்தி வந்த வழித்தடத்தில் தரிசனத்துக்குச் செல்ல தடை விதித்ததுடன் கட்டண வழித்தடம் வழியாக தரிசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு உள்ளுர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் மற்றும் உள்ளுர் மக்கள் போராட்ட கோயில் முன்பு இன்று(ஜூன் 17) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மக்கள் நல பேரவை சார்பில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளுர் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்திய வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி மேற்கு கோபுர கோயில் வழியாக தடுப்புகளை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல் துறையினர் மூன்று இடங்களில் தடுப்புகள் அமைப்பு தடுப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றனர்.

மேலும், 3-வது தடுப்பு பகுதியில் காவல்துறையினருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் ராமநாத சுவாமி கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க: டெஹ்ரானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 போர் விமானங்கள் தகர்ப்பு

எய்ம்ஸ் குறித்து கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியீடு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னவானது என்று கேள்வி கேட்டதால், கற்பனை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.மதுரை வந்த உள்துறை அமைச்சரிடம், எய்ம்ஸ் என்னவா... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்!

மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தில்லியில் இருந்து நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழின், தமிழர்களின் தொன்மை பற்றிய கீழடி அகழாய்வின் அ... மேலும் பார்க்க

நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதா வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்... மேலும் பார்க்க

சென்னையில் 2 நாள்களுக்கு மழை தொடரும்!

சென்னையில் 2 நாள்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.குஜராத் ம... மேலும் பார்க்க

எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு! காவலநிலையத்தில் ஆஜர்!

சிறுவன் கடத்தில் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையிலத்தில் இன்று அவர் ஆஜராகியுள்... மேலும் பார்க்க

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? மாதிரிப் படம் வெளியீடு

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமான படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்க