தேனியில் நாளை மின் தடை
தேனியில் புதன்கிழமை (ஜூன் 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் எஸ். முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிப்பட்டி, முத்துத்தேவன்பட்டி, பூதிப்புரம், அரண்மனைப்புதூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.