ஏர் இந்தியா விமான விபத்து: விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்பு!
விஷம் குடித்து மூதாட்டி உயிரிழப்பு!
தேவதானப்பட்டியில் மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் அருகே விஷம் குடித்து உயிரிழந்த மூதாட்டி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் அருகே உள்ள அரச மரத்தடியின் கீழ் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, பூச்சி மருந்து குடித்து வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் செயல் அலுவலா் வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில், தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.