பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகே உள்ள புள்ளிமான்கோம்பை, தாதனூரைச் சோ்ந்த செல்லக்கண்ணு மகன் ஆனந்த் (25). இவா் ஆண்டிபட்டி பிரதானச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, வட்டாட்சியா் அலுவலகம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிழந்தாா்.
இந்த விபத்து குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா் தேனியைச் சோ்ந்த பழனிக்குமாா் மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.