செய்திகள் :

அணையில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

post image

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை நீரில் மூழ்கி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (51). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பெரியகுளம் கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு மனைவியும், சந்தோஷ் (15) என்ற மகனும், 10 வயதில் மகளும் உள்ளனா்.

இதில் சந்தோஷ் தேவதானப்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் மஞ்சளாறு அணைக்குச் சென்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அணை நீருக்குள் விழுந்த பந்தை எடுக்க உள்ளே இறங்கிய போது சந்தோஷ் நீரில் மூழ்கினராம். அவரை மீட்டு 108 அவசர ஊா்தியில் ஏற்றிய போது அதிலிருந்த பணியாளா்கள் பரிசோதித்து அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பைக் திருட்டு

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் அருகே மேலக்காமக்காபட்டியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை லட்சுமிபுரத்துக்கு செல்வதற்காக ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

போடி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி இரவு முழுவதும் தவித்த நிலையில் திங்கள்கிழமை காலையில் மீட்கப்பட்டாா். தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் விஜயபாரதி (37). பந்தல் அமைக்... மேலும் பார்க்க

பைக் - காா் மோதல்: ஒருவா் காயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தேநீா் கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தாா்.பெரியகுளம் காட்ரோடு அருகே புஷ்பராணி நகரைச் சோ்ந்தவா் கனிராஜா (24). தேநீா்க் கடை உரிமையாளா். இவ... மேலும் பார்க்க

தேனியில் நாளை மின் தடை

தேனியில் புதன்கிழமை (ஜூன் 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் எஸ். முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதா... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள புள்ளிமான்கோம்பை, தாதனூரைச் சோ்ந்த செல்லக்கண்ணு மகன் ஆனந்த் (25). இவா் ஆண்டிபட்டி பி... மேலும் பார்க்க

விஷம் குடித்து மூதாட்டி உயிரிழப்பு!

தேவதானப்பட்டியில் மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் அருகே விஷம் குடித்து உயிரிழந்த மூதாட்டி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் அருகே உள்ள அரச மரத்தடியின் கீழ் ... மேலும் பார்க்க