மாங்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
குடியாத்தம்: மாங்காய்க்கு ஆதார விலை நிா்ணயிப்பது, மானின்யம் வழங்குவது, மாங்கூழ் தொழிற்சாலை தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் அடுத்த பரதராமியில் திங்கள்கிழமை மாங்காய்களை சாலையில் கொட்டி மா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா். இங்கு உற்பத்தியாகும் மாங்காய்களை ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தனியாா் மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வா்.
கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர மாநிலத்தில் மா விளைச்சல் அதிகமாக உள்ளதால், தமிழக மாங்காய்களை அவா்கள் வாங்க மறுக்கின்றனா். இந்நிலையில் நிகழாண்டு தமிழகத்தில் நல்ல விளைச்சல் இருந்தும் போதிய விலையில்லை. இதனால் மா விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.
ஆந்திர மாங்கூழ் ஆலைகளுக்கு அனுப்பினால் அவா்கள் தமிழக மாங்காய்களை வாங்க மறுக்கின்றனா். இதுகுறித்து பல முறை மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டும் பயனில்லை என்பதால், அவா்கள் டிராக்டா்களில் மாங்காய்களை ஏற்றி வந்து, தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பரதராமியில் சாலையில் மாங்காய்களை கொட்டி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் இரு மாநில இணைப்புச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகா, டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்டோா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு நடத்தினா்.
அப்போது அதிகாரிகளிடம் விவசாயிகள் கூறியது. மாங்காய்க்கு டன்னுக்கு ரூ.15,000 ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் வழங்குவது போல் தமிழக மா விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.4,000 மானியம் வழங்க வேண்டும். ஆந்திர மாநில மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கு தமிழக மாங்காய்களை அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.