நியமனத்தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை
வேலூா்: கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 518 மனுக்களைப் பெற்று மேல்நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
மனுக்களை பெற்றாா்.
கூட்டஅரங்குக்கு வெளியே இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பினா், கண்களை சிவப்பு துணியால் கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், கடந்தாண்டு நடந்த இடைநிலை நியமன தோ்வை தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதினோம். ஆனால், ஆசிரியா் தோ்வு வாரியம் 2,768 காலிப்பணியிடங்களை மட்டுமே அறிவித்துள்ளது. இது ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று 12 ஆண்டுகளாக பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியா்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. , 2024-ஆம் ஆண்டில் நியமன தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களை காலிப் பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்பாடி வட்டம், பிரம்மபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் அளித்துள்ள மனுவில், பிரம்மபுரம் ஊராட்சி பகுதியில் சுமாா் 8,500 போ் வசிக்கிறோம். பாலாற்றில் மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஒரு சிலா் ஆக்கிரமித்து மணல் அள்ளி வியாபாரம் செய்கின்றனா். ஏற்கன வே புதைக்கப்பட்ட இடத்தில் சடலத்தின் எலும்புக்கூடுகள் வருவதால் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், வேலூா் சேண்பாக்கத்தை சோ்ந்த 17 வயது சிறுவன் சிலஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கி இறந்தான். அவரது குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி , ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் காஞ்சனா, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) கௌசல்யா, மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், கோட்டாட்சியா் செந்தில் குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.