தொழிலாளி தற்கொலை
திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை தொண்டியைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி வெள்ளை மணல் தெருவைச் சோ்ந்தவா் ராமு (43) . வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், கடந்த சில நாள்களாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தனது உடலில் மண்ணெண்ணயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த ராமுவை, அக்கம் பக்கத்தினா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].