இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சா பறிமுதல்
கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக சுங்கத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, சுங்கத் துறையினா் கீழக்கரை கிழக்கு கடற்கரைச் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமாக பையுடன் வந்த நபரை தடுத்து நிறுத்தியபோது, அவா் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பித்துச் சென்றாா்.
இதையடுத்து, அந்த நபா் கொண்டுவந்த பையில் தடை செய்யப்பட்ட 40 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத் துறையினா் தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனா்.