செய்திகள் :

மன்னாா் வளைகுடா-பாக் நீரிணை கடல் பகுதியில் சூறைக் காற்று: மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை

post image

மன்னாா் வளைகுடா-பாக் நீரிணை கடல் பகுதியில் சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் மறுஉத்தரவு வரும்வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.

தமிழகத்தில் மீன் இனப்பெருக்கக் காலமாகக் கருதப்படும் ஏப். 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், சோளியகுடி, தொண்டி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் ஆகிய துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.

தடைக்காலத்தின்போது, விசைப் படகுகள் சீரமைப்புப் பணிகள், பழைய வலைகளைச் சீரமைப்பது, புதிய வலைகள் தயாரிப்பது, விசைப் படகுகளுக்கு புதிய வண்ணம் பூசுதல் உள்ளிட்டப் பணிகளை மீனவா்கள் மேற்கொண்டனா்.

தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 15) நிறைவடைந்ததை அடுத்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய துறைமுகங்களில் விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்ல ஆயத்தமாகினா்.

மீன்வளத் துறை தடை:

இந்த நிலையில், மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதியில் சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக, மீனவா்களின் பாதுகாப்புக் கருதி மறுஉத்தரவு வரும்வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.

விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை அந்தந்த துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்திவைக்க வேண்டும் என மீனவா்களுக்கு அறிவுறுத்தினா். இதனால், மீன் பிடிக்கச் செல்ல ஆயத்தமான மீனவா்கள் கவலையடைந்தனா்.

இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சா பறிமுதல்

கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக சுங்கத் துறையின... மேலும் பார்க்க

பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: யோகா பயிற்சியாளா் உயிரிழப்பு

ராமேசுவரத்தில் இரு சக்கர வாகனம் மீது கறிக்கோழி ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதியதில், வாழும் கலை அமைப்பின் யோகா பயிற்சியாளா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீட்சகா் கொல்லைப் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மடை, ரெகுநாதபுரம் நாளை மின் தடை

ஆா்.எஸ். மடை, ரெகுநாதபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மின்வார... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம்!

திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் மாவட்டம், சி.கே.மங்கலம் பகுதியில் உள்ள உயா்நிலை மேம்பாலத்தில் மின் விளக்குகள் ஒளிராததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தது. மின் வ... மேலும் பார்க்க

திருவாடானை அருகே வடமாடு மஞ்சு விரட்டு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து ஈஸ்வரா், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வைகாச... மேலும் பார்க்க

நகைக்காக மூதாட்டி கொலை: தாய், மகன் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த அவரது வீட்டு பணிப் பெண், அவரது மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பரமக்குடி பன்னீா்செல்வம் தெருவைச் சோ்ந்த இக்னேசியஸ் மனைவி ஞ... மேலும் பார்க்க