தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: யோகா பயிற்சியாளா் உயிரிழப்பு
ராமேசுவரத்தில் இரு சக்கர வாகனம் மீது கறிக்கோழி ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதியதில், வாழும் கலை அமைப்பின் யோகா பயிற்சியாளா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீட்சகா் கொல்லைப் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (62), வாழும் கலை அமைப்பில் யோகா பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் பொந்தம்புளி அருகே அவா் சென்றபோது, ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு கறிக்கோழி ஏற்றிவந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நகா் காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திக்ராஜா, உதவி ஆய்வாளா் மணிகண்டன், முருகேசன் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த அசாருதீன் (30) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.