ஈரான் செய்தி நிறுவனத்தில் குண்டுவீச்சு! நேரலையில் அலறியடித்து ஓடிய செய்தி வாசிப்...
ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை நெல் விவசாயத்துக்கு தண்ணீா்த் தட்டுப்பாடு
திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் டீசல் மோட்டாா் வைத்து தண்ணீா் பாய்ச்சி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பொட்டக்கோட்டை, பனிக்கோட்டை, நெடும்புலிகோட்டை, பிச்சானாா்கோட்டை, புலிவரதன் கோட்டை, இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் கோடை நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடும் வெயில் காரணமாக அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் பயிருக்கு தண்ணீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், மடையின் மூலம் தண்ணீா்ப் பாய்ச்ச முடியாத நிலையில், விவசாயிகள் டீசல் மோட்டாா் வைத்து தண்ணீா் பாய்ச்சி வருகின்றனா். இதனால், கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவத்தனா்.