செய்திகள் :

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு!

post image

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணை இன்று (ஜூன் 16) வெளியிடப்பட்டுள்ளது.

ஐசிசியின் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.

இதையும் படிக்க: அம்மா நலம், மீண்டும் இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!

இந்த நிலையில், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணை இன்று (ஜூன் 16) வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தொடரின் முதல் போட்டியில் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன. அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டி கொழும்புவில் நடைபெறுகிறது.

முதல் அரையிறுதிப் போட்டி அக்டோபர் 29 ஆம் தேதி குவாஹாட்டியில் நடைபெறவுள்ளது. அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறும் பட்சத்தில், போட்டியானது கொழும்புவில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி அக்டோபர் 30 ஆம் தேதி குவாஹாட்டி அல்லது கொழும்புவில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 2 ஆம் தேதி பெங்களூரு அல்லது கொழும்புவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்திய அணிக்காக விளையாட ஊக்கமளித்தவர் வாஷிங்டன் சுந்தர்; மனம் திறந்த சாய் சுதர்சன்!

உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கான போட்டி விவரம்

செப்டம்பர் 30 - இந்தியா - இலங்கை, பெங்களூரு

அக்டோபர் 5 - இந்தியா - பாகிஸ்தான், கொழும்பு

அக்டோபர் 9 - இந்தியா - தென்னாப்பிரிக்கா, விசாகப்பட்டினம்

அக்டோபர் 12 - இந்தியா - ஆஸ்திரேலியா, விசாகப்பட்டினம்

அக்டோபர் 19 - இந்தியா - இங்கிலாந்து, இந்தூர்

அக்டோபர் 23 - இந்தியா - நியூசிலாந்து, குவாஹாட்டி

அக்டோபர் 26 - இந்தியா - வங்கதேசம், பெங்களூரு

முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இவர்கள் இருவரும் வேண்டும்: ஹர்பஜன் சிங்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிக... மேலும் பார்க்க

பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது புகார்; ஆதாரம் கேட்கும் டிஎன்பிஎல்!

பந்தை சேதப்படுத்தியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் மீது மதுரை பேந்தர்ஸ் அணி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் டிஎ... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக விளையாட ஊக்கமளித்தவர் வாஷிங்டன் சுந்தர்; மனம் திறந்த சாய் சுதர்சன்!

இந்திய அணிக்காக விளையாட ஊக்கமளித்தவர் வாஷிங்டன் சுந்தர் என சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. 5 போட்டிகள் கொண... மேலும் பார்க்க

அம்மா நலம், மீண்டும் இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!

மருத்துவ அவசரம் காரணமாக தாயகம் திரும்பிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீண்டும் இந்திய அணியுடன் இணையவுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக... மேலும் பார்க்க

கடைசி டி20: 20 சிக்ஸர்கள் விளாசிய மே.இ.தீவுகள்; அயர்லாந்துக்கு இமாலய இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி அயர்லாந்தில் சுற்றுப்... மேலும் பார்க்க

கவாஜாவின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதா? ஆஸி. பயிற்சியாளர் பதில்!

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜாவின் கிரிக்கெட் பயணம் குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மெக்டொனால்டு பேசியுள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி... மேலும் பார்க்க