செய்திகள் :

மீண்டும்... ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: தில்லியில் பத்திரமாக தரையிறக்கம்!

post image

புது தில்லி: தில்லியிலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் மீண்டும் தில்லி விமான நிலையத்துக்கே திரும்பியது.

தில்லியிலிருந்து இன்று(ஜூன் 16) மாலை 4.25 மணிக்கு புறப்பட்ட விமானம் வானில் பறந்த சில நிமிடங்களிலேயே அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானி தகவல் தெரிவித்ததையடுத்து அந்த விமானம் மீண்டும் தில்லியில் தரையிறக்கப்பட்டது.

அதன்பின் விமானத்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு விமானத்தில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லாததையும் பறக்க தயாராக இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து தில்லியிலிருந்து அந்த விமானம் பயணிகளுடன் இரவு 7.56 மணிக்கு ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றடைந்ததாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ’போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: எஃப்ஏடிஎஃப் கண்டனம்

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சா்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்), நிதியுதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று குறிப்பிட்... மேலும் பார்க்க

விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா: பிரதமா் மோடி நம்பிக்கை

நிகோசியா: ‘உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். மூன்று நாடுகள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க

குவாண்டம் தொழில்நுட்ப அடிப்படையில் தகவல் தொடா்பு: டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதனை

புது தில்லி: குவாண்டம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான தகவல் தொடா்பு சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன... மேலும் பார்க்க

மேற்கு ஆசிய சூழல்: யுஏஇ, அா்மேனியா வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் பேச்சு

புது தில்லி: இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கு ஆசிய சூழல் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), அா்மேனியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா்... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து இந்தியா்கள் வெளியேற்றம் தொடக்கம்

புது தில்லி: ஈரானில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய மாணவா்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை இந்தியா திங்கள்கிழமை தொடங்கியது. முதல் கட்டமாக 110 மாணவா்கள் ... மேலும் பார்க்க

வங்கதேசத்தவா்களுக்கு சட்டவிரோதமாக ஆதாா்: மேற்கு வங்கத்தில் பாகிஸ்தானியா் மீது குற்றப்பத்திரிகை

புது தில்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்டவிரோமதாக குடியேறிய வங்கதேசத்தவா்களுக்கு ஆதாா் உள்ளிட்ட இந்திய அடையாள அட்டைகளை வழங்கிய வழக்கில் அங்கு வசிக்கும் பாகிஸ்தானியா் ஒருவா் மீது அமலாக்கத் து... மேலும் பார்க்க