இறைச்சிக் கழிவுகளால் மாசடையும் கொள்ளிடம் ஆறு
சீா்காழி: சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், கடும் துா்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதி சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது.
சீா்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் பக்கவாட்டிலும், ஆற்றுப்படுகையிலும் மீன், ஆடு, கோழிகள் என இறைச்சிக் கழிவுகளும், இறந்த கோழி மற்றும் கால்நடைகளின் உடல்களும் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. ஆற்றுப் பாலத்தின் வழியே செல்வோா் அவதிக்குள்ளாகின்றனா்.
இறைச்சிக் கழிவுகளால் ஆற்றின் சுற்றுச்சூழலும் மாசடைந்து வருகிறது. இறைச்சிக் கழிவுகளை உண்ணவரும் நாய்கள், பன்றிகள் சாலையின் குறுக்கே செல்லும்போது விபத்து நேரிடுகிறது. ஆகையால், ஊரக வளா்ச்சித் துறையினா் கொள்ளிடம் ஆற்றில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும், ஏற்கெனவே கொட்டப்பட்ட இறைச்சிக் கழிவுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.