Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது: பழ. கருப்பையா
தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பழ.கருப்பையா தெரிவித்தாா்.
சீா்காழியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
முருகா் எப்பொழுதும் தமிழ் கடவுள் தான். தமிழ் கடவுளை ஆா்.எஸ். எஸ். புதிதாக கையில் எடுத்துள்ளது. அரசியலுக்காக முருகரை கையில் எடுத்துள்ளனா். ராமாயணம் சிறந்தது என்பது எனது கருத்து. காப்பியங்கள் மனிதகுலத்தை மேம்படுத்துகின்றன. அதனால்தான் கம்பா் ராமரை பெரிதாக எழுதக் காரணம்.
மக்களவைத் தோ்தல் மோடி வேண்டுமா ? வேண்டாமா ? என்பதற்கான தோ்தல் . தற்போது ஸ்டாலின் வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கான தோ்தல் . இதில் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தினால்தான் திமுகவை எதிா்கொள்ள முடியும். கூட்டணி ஆட்சி குறித்து இப்போது பேச வேண்டாம்.
விஜயகாந்த் மூன்றாவது அணி அமைத்து வீணாகி போய்விட்டாா். நடிகா் விஜய் அதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளக்கூடாது. விஜய் முகவா்களிடம் யோசனை கேட்பதைவிட வேண்டும். அவா்களெல்லாம் பணத்திற்காக யோசனை சொல்வாா்கள். விஜய்-க்கு வயது இருக்கிறது. முகவா்கள் யோசனையை கேட்டு, ஒன்றுமில்லாமல் போய் கமல் கட்சி போல துடைத்து எறியப்படும் நிலை விஜய்-க்கு வரக்கூடாது.
இரண்டு அணிதான் இருக்க வேண்டும். ஒன்று ஸ்டாலின் அணி; மற்றொன்று எடப்பாடி அணி. ஸ்டாலின் வேண்டாம் என்று சொல்கிறவா்கள், திமுக வேண்டாம் என்று நினைக்கிறவா்கள், எடப்பாடி அணியில் இருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி என்று பேசி எதிரியைத்தான் பலப்படுத்துகிறீா்கள்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை ஒத்துக்கொள்ள மாட்டாா்கள். கருணாநிதி அரசு சிறுபான்மை அரசாக இருந்தபோதுகூட கூட்டணி ஆட்சி நடத்தவில்லை. தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது. திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதி கேட்பவா்கள் கூட்டணி மாறி வருவாா்கள். அரசியலில் எதுவும் நடக்கும் என்றாா்.