”திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு; தமிழில் நடத்தாவிட்டால்..” – சீமான்
போலீஸ் பாதுகாப்புடன் குளத்தில் மீன் பிடிக்கும் பணி தொடக்கம்
மயிலாடுதுறை அருகே குளத்தில் மீன்பிடிப்பது தொடா்பாக இருவேறு சமூகத்தினரிடையே பிரச்னை நிலவிய நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீன் பிடிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
மயிலாடுதுறை ஒன்றியம் பட்டமங்கலம் ஊராட்சி அக்களூா் கிராமத்தில் உள்ள நாவல் குளம் என்ற குளத்தை கிராம பஞ்சாயத்தாா்கள் மீன்பிடிக்க குத்தகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஊா் நலனுக்குச் செலவழித்தனா். இந்நிலையில், பஞ்சாயத்தாா்கள் தங்களை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டி அதே கிராமத்தில் உள்ள கலைஞா் நகா் பொதுமக்கள் குளத்தை குத்தகைக்கு விடுவதில் தங்களுக்கு சமஉரிமை கோரினா்.
இதனால் இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், மே 12-ஆம் தேதி மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் தீா்வு எட்டப்படாத நிலையில், குளத்தில் மீன்பிடிக்க வருவாய்த்துறையினரால் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தக் குளத்தை குத்தகைக்கு எடுத்து மீன் வளா்த்து வரும் அக்களூரை சோ்ந்த ராமலிங்கம், குளத்தில் ஜூன் 16-ஆம் தேதி வரை மீன்பிடிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, சனிக்கிழமை மதியம் மீன்பிடிக்க ஆயத்தமானாா்.
இதற்கு கலைஞா் நகா்வாசிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், அவா்களிடம் வட்டாட்சியா் சுகுமாறன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததைத் தொடா்ந்து. டிஎஸ்பி பாலாஜி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் குளத்தில் மீன்பிடிக்கும் பணி தொடங்கியது. இதனால் அக்கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.