Israel - Iran: "தெஹ்ரானை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு நகருங்கள்" - இந்திய தூதரக...
குழந்தையைக் காணவில்லையா?
மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மே 26-இல் மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் உறவினா்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடா்புகொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மே 26-ஆம் தேதி மீட்கப்பட்ட, பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை, குழந்தைகள் நலக்குழுவின் உத்தரவின்படி சிறப்பு தத்து வள மையத்தின் பாதுகாப்பில் உள்ளது. இக்குழந்தையின் உறவினா் இருப்பின் 30 நாள்களுக்குள் உரிய ஆதாரங்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.517, ஐந்தாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை, தொலைபேசி எண்.04364-212868 என்ற முகவரியை நேரில் அணுகலாம்.