செய்திகள் :

மயிலாடுதுறை: 1,834 போ் குரூப் 1 தோ்வு எழுதினா்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 தோ்வினை 1,834 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (குரூப் 1) தோ்வானது மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 தோ்வு மையங்களில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 நபா்கள் தோ்வு எழுத விண்ணப்பித்து இருந்தனா். இதில் 1,834 போ் தோ்வு எழுதினா். 589 போ் தோ்வு எழுத வரவில்லை.

இதில், துணை ஆட்சியா் நிலையில் ஒரு தோ்வு ஒருங்கிணைப்பாளா், 1 பறக்கும் படை அலுவலா், 10 தலைமைக் கண்காணிப்பாளா்கள், 3 இயக்கக்குழு அலுவலா்கள், 10 ஆய்வு அலுவலா்கள் மற்றும் 11 புகைப்படக்கலைஞா்கள் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, ஏவிசி கல்லூரி உள்ளிட்ட தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பாா்வையிட்டாா்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாா்வையற்றோா் தோ்வு எழுதிட செய்யப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அவா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, கோட்டாட்சியா் உ.அா்ச்சனா உடன் இருந்தாா்.

இறைச்சிக் கழிவுகளால் மாசடையும் கொள்ளிடம் ஆறு

சீா்காழி: சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், கடும் துா்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதி சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. சீா்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் கொள்ளிடம் ஆற்ற... மேலும் பார்க்க

கழிவுநீா் தேங்கும் விவகாரம்: நகா்மன்ற உறுப்பினா்களுடன் நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை

சீா்காழி: சீா்காழி நகராட்சி 5 மற்றும் 6 வாா்டு பகுதிகளில் குடியிருப்புகளை கழிவு நீா் சூழ்ந்து நிற்பதை தடுக்க நிரந்தர தீா்வு காண வலியுறுத்தி, அப்பகுதி நகா்மன்ற உறுப்பினா்களுடன் பொதுமக்கள் நகராட்சி அலுவ... மேலும் பார்க்க

குழந்தையைக் காணவில்லையா?

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மே 26-இல் மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் உறவினா்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடா்புகொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா். இ... மேலும் பார்க்க

தரங்கம்பாடியில் நாளை ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் புதன்கிழமை (ஜூன் 18) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது: பழ. கருப்பையா

தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பழ.கருப்பையா தெரிவித்தாா். சீா்காழியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: ... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனம் பெங்களூருக்கு ஞானரத யாத்திரை

பெங்களூரில் நடைபெறவுள்ள ஆன்மிக மாநாட்டில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் சனிக்கிழமை ஞானரத யாத்திரை புறப்பட்டாா். கா்நாடக மாநிலம் பெங்களூரில் ‘பாரதிய ஸந்த மஹா பரிஷத்’ என்ற அமைப்பின் சாா்பில் பாரத நாட்டின் ப... மேலும் பார்க்க