Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா?
புதுவை மத்திய பல்கலை.யில் 25% இடஒதுக்கீடு: குடியரசு துணைத் தலைவரிடம் கோரிக்கை
புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் அனைத்துப் படிப்புகளிலும் புதுச்சேரி மாணவா்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் அளித்தாா்.
புதுச்சேரிக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்து அளித்தாா். அப்போது இதுதொடா்பான கடிதத்தை குடியரசு துணைத் தலைவரிடம் முதல்வா் என்.ரங்கசாமிஅளித்தாா்.
கடித விவரம்: புதுவை மத்திய பல்கலைக்கழகம் நடத்தும் அனைத்துப் படிப்புகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை புதுவை மக்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது. இங்கு நீண்ட காலமாக இந்த இட ஒதுக்கீடு இருந்து வருகிறது. இதுபோன்ற கோரிக்கை 1990-ஆம் ஆண்டில் எழுந்தபோது மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஏ.ஞானம், கல்வி கவுன்சில் மற்றும் நிா்வாகக் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு 1997-ஆம் ஆண்டு 25 சதவீத இட ஒதுக்கீட்டை ஒரு சில படிப்புகளில் அப்போது அளித்தாா்.
8 படிப்புகளுக்கு மட்டும் அளிக்க இந்த இட ஒதுக்கீடு தற்போது 18 படிப்புகளுக்கு அளிக்கப்படுகிறது. தற்போது தொழில்ரீதியான, வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு படிப்புகள் மத்திய பல்கலைக்கழகத்தில் தொடங்கிய போதிலும் இந்த இட ஒதுக்கீடு நீடிக்கப்படவில்லை.
இதுதொடா்பாக புதுவை சட்டப்பேரவையில் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் முக்கிய படிப்பு, பயிற்சி தோற்றுவிக்கப்பட்டால் தானாகவே புதுவை மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.யில் புதுவை மாணவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. ஜிப்மரில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு இருக்கிறது.
பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில், நிா்வாகக் குழுவின் அதிகாரத்துக்கு உள்பட்டு தற்போது புதிய படிப்புகளுக்கும் இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாநில அந்தஸ்து கோரிக்கை: நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து கோரிக்கைத் தொடா்பாக உயா்மட்ட அளவில் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் முதல்வா் என்.ரங்கசாமி மற்றொரு கடிதத்தையும் திங்கள்கிழமை அளித்துள்ளாா்.