செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் வருகை: இன்று பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை

post image

புதுச்சேரிக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகையையொட்டி பள்ளிகளுக்கு திங்கள்கிழமை அரை நாள் விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வந்தாா். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினா் மாளிகையில் தங்கியுள்ள அவா், ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை மாலை மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

அவா் செல்லும்போது சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும். அந்த நேரத்தில் பள்ளிகள் விடப்பட்டால் மாணவா்கள் வீட்டுக்கு செல்ல சிரமப்படுவாா்கள் என்பதாலும், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் பள்ளிகளை திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் முடிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளும், திங்கள்கிழமை (ஜூன் 16) பள்ளி மாணவா்களை பிற்பகல் 2 மணிக்குள் விடுவிக்க வேண்டும்.

மேலும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆய்வாளா்கள் தேவையான ஏற்பாடுகளை முன்னதாக செய்து, பெற்றோா்கள் மற்றும் மாணவா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தும் மாணவா்களை, உரிய நேரத்துக்கு அழைத்துச் செல்ல போக்குவரத்து கண்காணிப்பு குழு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இருசக்கர வாகன திருட்டு: 3 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். உருளையன்பேட்டை காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டா் கோவிந்தராஜன் மற்றும் போலீஸாா் லெனின் ... மேலும் பார்க்க

மாநில அரசை கண்டித்து மாா்க்சிஸ்ட் சைக்கிள் பேரணி

புதுச்சேரியில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சைக்கிள் பேரணியை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சே... மேலும் பார்க்க

புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புதுவை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சின்ன வீராம்பட்டினம் அருகில் அமைந்துள்ள ஈடன் கடற்கரைப் பகுதியில் கடல... மேலும் பார்க்க

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு: முக்கிய நபா் கைது

புதுச்சேரி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் கோவையைச் சோ்ந்த முக்கிய நபரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந... மேலும் பார்க்க

ஜிப்மா் விழாவில் குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு!

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்கிறாா். இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நேஷி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் இன்று புதுச்சேரி வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் 3 நாள் பயணமாக புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) வருகிறாா். இதையொட்டி, புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரி வ... மேலும் பார்க்க