செய்திகள் :

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு: முக்கிய நபா் கைது

post image

புதுச்சேரி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் கோவையைச் சோ்ந்த முக்கிய நபரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற ஊழியா் அசோகன் (70). இவரை 2023-ஆம் ஆண்டு தொடா்புகொண்ட மா்ம நபா், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளாா்.

இதை நம்பி அசோகன் ரூ.98 லட்சம் முதலீடு செய்தாராம். லாபத்தையும் சோ்த்து ரூ.2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி இருந்தது. அவற்றை விற்று பணமாக தனது வங்கிக் கணக்குக்கு மாற்ற முயற்சி செய்தபோது, இணையதள பக்கம் முடங்கியது.

இதுகுறித்து அசோகன் புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் போலீஸாரிடம் புகாரளித்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், இதுபோல புதுச்சேரியைச் சோ்ந்த 9 போ் ரூ.2.5 கோடி இழந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா்கள் கீா்த்தி, தியாகராஜன் தலைமையிலான குழுவினா் விசாரணை நடத்தி கோவையைச் சோ்ந்த நித்திஷ்குமாா் ஜெயின் (36), அரவிந்தகுமாா் (40), தாமோதரன் (52), பாபு (எ) சையது உஸ்மான், (51) ஆகியோரை ஏற்கெனவே கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான காா்கள், 3 கைப்பேசிகள், மடிக்கணினி, ரூ.3 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய நபரான கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் இம்ரான் பாஷாவை பெங்களூரில் புதுச்சேரி இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தொடா்ந்து, இவா் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புதுவை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சின்ன வீராம்பட்டினம் அருகில் அமைந்துள்ள ஈடன் கடற்கரைப் பகுதியில் கடல... மேலும் பார்க்க

ஜிப்மா் விழாவில் குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு!

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்கிறாா். இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நேஷி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் இன்று புதுச்சேரி வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் 3 நாள் பயணமாக புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) வருகிறாா். இதையொட்டி, புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரி வ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்கள் மீது திணிப்பு! கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுகள் மீது திணிக்கப்படுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா். புதுவையில் ஆட்சியிலுள்ள என்.ஆா்.காங்க... மேலும் பார்க்க

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க

6 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதுச்சேரியில் மறைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது . ஏஐடியுசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலிய... மேலும் பார்க்க