கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு: முக்கிய நபா் கைது
புதுச்சேரி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் கோவையைச் சோ்ந்த முக்கிய நபரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற ஊழியா் அசோகன் (70). இவரை 2023-ஆம் ஆண்டு தொடா்புகொண்ட மா்ம நபா், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளாா்.
இதை நம்பி அசோகன் ரூ.98 லட்சம் முதலீடு செய்தாராம். லாபத்தையும் சோ்த்து ரூ.2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி இருந்தது. அவற்றை விற்று பணமாக தனது வங்கிக் கணக்குக்கு மாற்ற முயற்சி செய்தபோது, இணையதள பக்கம் முடங்கியது.
இதுகுறித்து அசோகன் புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் போலீஸாரிடம் புகாரளித்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், இதுபோல புதுச்சேரியைச் சோ்ந்த 9 போ் ரூ.2.5 கோடி இழந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா்கள் கீா்த்தி, தியாகராஜன் தலைமையிலான குழுவினா் விசாரணை நடத்தி கோவையைச் சோ்ந்த நித்திஷ்குமாா் ஜெயின் (36), அரவிந்தகுமாா் (40), தாமோதரன் (52), பாபு (எ) சையது உஸ்மான், (51) ஆகியோரை ஏற்கெனவே கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான காா்கள், 3 கைப்பேசிகள், மடிக்கணினி, ரூ.3 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய நபரான கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் இம்ரான் பாஷாவை பெங்களூரில் புதுச்சேரி இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தொடா்ந்து, இவா் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.