குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
6 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
புதுச்சேரியில் மறைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது .
ஏஐடியுசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலியாா் பேட்டை ஏஐடியுசி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆட்டோ சங்க மாநிலத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். ஆட்டோ சங்க மாநில பொதுச் செயலாளா் சேதுசெல்வம் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பேசினாா். மறைந்த ஆட்டோ ஓட்டுநா்களான சிருங்கேரி மடம் -உலகநாதன், சிருங்கேரி மடம் -கவுசிக் ஹசரப், பிருந்தாவனம்-முத்து, தலைமைச் செயலகம்-பாக்கியநாதன், கனகசெட்டிகுளம் -சிசுபாலன், தலைமைச் செயலகம் -ரவி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.