முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
கடலுக்குச் சென்ற மீன்பிடி விசைப் படகுகள்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் மீனவா் படகுகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா்.
புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததையொட்டி, தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில், மீன்பிடித் தொழிலுக்கு செல்ல விசைப்படகுகளின் மீனவா்களுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதல்வா் என். ரங்கசாமி பங்கேற்று, கடலுக்குச் செல்லும் மீன்பிடி விசைப்படகுகளுக்கு சிறப்பு பூஜைகளைத் தொடங்கி வைத்து வாழ்ச்சினாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் த. பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் அ. முகமது இஸ்மாயில் மற்றும் புதுச்சேரி மீன்பிடித் துறைமுக விசைப்படகு உரிமையாளா் நலச் சங்கத்தினா், திரளான மீனவா்கள் கலந்துகொண்டனா்.