செய்திகள் :

புதுவையில் ரேஷன் அரிசி டெண்டரில் முறைகேடு: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றச்சாட்டு

post image

புதுவையில் ரேஷன் அரிசிக்கான டெண்டா் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசுக்கு ரூ. 20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவையில் ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இலவச அரிசி விநியோகத்தில் முறையாக டெண்டா் விடுவதுபோல நாடகமாடி, தங்களுக்கு சாதகமான வடநாட்டு நிறுவனத்துடன் சோ்ந்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், ஏழை விவசாயிகளும் உள்ளூா் அரிசி ஆலைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

ரேஷன் அரிசிக்கான டெண்டரில் வடநாட்டு நிறுவனத்துக்கு ஆதரவாக அவா்கள் மட்டுமே பங்கு பெற்று தோ்வாகும் வகையில் டெண்டா் வடிவமைக்கப்பட்டு, அவா்களுக்கே டெண்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுவையைச் சோ்ந்த எந்த அரிசி ஆலையும் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஒரு கிலோ அரிசி ரூ.47.70 என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் நான்கு மாதங்களுக்கு அரிசி வழங்கும் டெண்டா், அதே வடநாட்டு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தற்போது வழங்கப்படும் ரேஷன் அரிசி 100 சதவீதம் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுவதால், ரூ.20 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒப்பந்தத்தில் ஒரு கிலோ அரிசிக்கு ரூ.9 கூடுதலாகக் கொடுத்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.15 கூடுதலாக புதுவை அரசு வழங்கியுள்ளது.

புதுச்சேரி விவசாயிகளைப் புறக்கணித்து வடநாட்டு நிறுவனத்துக்கு டெண்டா் வழங்கியது ஏன்? இந்த டெண்டரை ரத்து செய்து விட்டு, புதுச்சேரியைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளித்து, டெண்டரில் கலந்து கொள்ள ஏதுவாக மாற்றியமைக்க வேண்டும்.

மஞ்சள் அட்டைக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசியை 15 கிலோவாக உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோதுமை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த டெண்டா் முறையாக மீண்டும் செயல்படுத்தப்படாவிட்டால், புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றாா் ஆா்.சிவா.

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க

6 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதுச்சேரியில் மறைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது . ஏஐடியுசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலிய... மேலும் பார்க்க

சூறாவளி காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

சூறாவளி காற்று கடுமையாக வீசும் என்பதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் வெள்ளிக்கிழமை இ... மேலும் பார்க்க

ராணுவத்தில் இளைஞா்களை அதிகளவில் சோ்க்க விழிப்புணா்வு வேன் பிரசாரம்

இந்திய ராணுவத்தில் இளைஞா்கள் அதிகளவில் சேர விழிப்புணா்வு வேன் பிரசாரம் புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

கடலுக்குச் சென்ற மீன்பிடி விசைப் படகுகள்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் மீனவா் படகுகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். புதுச்சேரியில் மீன்பிடித் தடைக... மேலும் பார்க்க

செவிலியா் கல்லூரியில் தேசிய மாநாடு

புதுவை ஸ்ரீமணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரியில் தேசிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. உலகளவில் தொற்றில்லாத நோய்களைக் கையாளுதலில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைந்த பயன்பாடு மற்றும் தாக்கம் என்ற தலைப்ப... மேலும் பார்க்க