சூறாவளி காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
சூறாவளி காற்று கடுமையாக வீசும் என்பதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சூறாவளி காற்று மணிக்கு 45 கி. மீ. முதல் 55 கி. மீ. வேகத்தில் இடையிடையே 65 கி. மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, புதுவை மீனவா்கள் ஜூன் 13முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.