செவிலியா் கல்லூரியில் தேசிய மாநாடு
புதுவை ஸ்ரீமணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரியில் தேசிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
உலகளவில் தொற்றில்லாத நோய்களைக் கையாளுதலில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைந்த பயன்பாடு மற்றும் தாக்கம் என்ற தலைப்பில் 3-ஆவது தேசிய மாநாடு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
மாநாட்டை மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் தனசேகரன் தொடங்கி வைத்தாா்.
செயலாளா் டாக்டா் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தாா். மாநாட்டில் பொருளாளா் ராஜராஜன், துணை செயலாளா் வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் டாக்டா் முத்தமிழ்செல்வி வரவேற்றாா். தேசிய அளவில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து நிபுணா்கள் இதில் பங்கேற்றனா். மேலும், புதுச்சேரியில் அனைத்து செவிலியா் கல்லூரிகளின் பேராசிரியா்கள், இணை பேராசிரியா்கள், துணை பேராசிரியா்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனா். முடிவில் துணை பேராசிரியா் சக்திபிரியா நன்றி கூறினாா்.