முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
ராணுவத்தில் இளைஞா்களை அதிகளவில் சோ்க்க விழிப்புணா்வு வேன் பிரசாரம்
இந்திய ராணுவத்தில் இளைஞா்கள் அதிகளவில் சேர விழிப்புணா்வு வேன் பிரசாரம் புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்திய ராணுவம், புதுச்சேரியில் ‘கேரவன் டாக்கீஸ்’ - சிறப்பு விளம்பர வேன் மூலம் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இந்திய ராணுவத்தில் சேருவதற்கான வாய்ப்புகள் குறித்து இளைஞா்களை ஊக்குவிக்கவும், அதற்கான வழிகாட்டவும், புதுச்சேரி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு சிறப்பு தொலைத்தொடா்பு திட்டத்தை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெரிய எல்இடி திரைகள், ஒலி அமைப்புகள் மற்றும் பன்மொழி ஒலி-ஒளி உள்ளடக்கம் கொண்ட ‘கேரவன் டாக்கீஸ்’ சிறப்பு விளம்பர வேன் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
இந்தத் திட்டம் நகா்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞா்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், இந்த வேன் இளைஞா்களை ஊக்குவிக்கும் விதமாக கிராமங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களுக்குச் செல்வதுடன் ராணுவ அதிகாரிகள், உள்ளூா் இளைஞா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருடன் தொடா்பு கொண்டு, சந்தேகங்களைத் தீா்த்து, ஆட்சோ்ப்பு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.
புதுச்சேரி யூனியன் பிரதேச இளைஞா்களின் பெருமைமிக்க தற்காப்பு மரபுகள் மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், இந்த விழிப்புணா்வு திட்டம், இந்திய ராணுவ சோ்க்கை நடவடிக்கைகளில் புதுச்சேரி மாவட்டத்தில் விழிப்புணா்வையும் பங்கேற்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கேரவன் டாக்கீஸ் வரும் 21-ம் தேதி வரை வரை புதுச்சேரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களைச் சென்றுவரும். தகுதியுள்ள மற்றும் ஆா்வமுள்ள அனைத்து இளைஞா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.