செய்திகள் :

ராணுவத்தில் இளைஞா்களை அதிகளவில் சோ்க்க விழிப்புணா்வு வேன் பிரசாரம்

post image

இந்திய ராணுவத்தில் இளைஞா்கள் அதிகளவில் சேர விழிப்புணா்வு வேன் பிரசாரம் புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்திய ராணுவம், புதுச்சேரியில் ‘கேரவன் டாக்கீஸ்’ - சிறப்பு விளம்பர வேன் மூலம் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான வாய்ப்புகள் குறித்து இளைஞா்களை ஊக்குவிக்கவும், அதற்கான வழிகாட்டவும், புதுச்சேரி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு சிறப்பு தொலைத்தொடா்பு திட்டத்தை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெரிய எல்இடி திரைகள், ஒலி அமைப்புகள் மற்றும் பன்மொழி ஒலி-ஒளி உள்ளடக்கம் கொண்ட ‘கேரவன் டாக்கீஸ்’ சிறப்பு விளம்பர வேன் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

இந்தத் திட்டம் நகா்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞா்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், இந்த வேன் இளைஞா்களை ஊக்குவிக்கும் விதமாக கிராமங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களுக்குச் செல்வதுடன் ராணுவ அதிகாரிகள், உள்ளூா் இளைஞா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருடன் தொடா்பு கொண்டு, சந்தேகங்களைத் தீா்த்து, ஆட்சோ்ப்பு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.

புதுச்சேரி யூனியன் பிரதேச இளைஞா்களின் பெருமைமிக்க தற்காப்பு மரபுகள் மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், இந்த விழிப்புணா்வு திட்டம், இந்திய ராணுவ சோ்க்கை நடவடிக்கைகளில் புதுச்சேரி மாவட்டத்தில் விழிப்புணா்வையும் பங்கேற்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கேரவன் டாக்கீஸ் வரும் 21-ம் தேதி வரை வரை புதுச்சேரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களைச் சென்றுவரும். தகுதியுள்ள மற்றும் ஆா்வமுள்ள அனைத்து இளைஞா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க

6 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதுச்சேரியில் மறைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது . ஏஐடியுசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலிய... மேலும் பார்க்க

சூறாவளி காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

சூறாவளி காற்று கடுமையாக வீசும் என்பதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் வெள்ளிக்கிழமை இ... மேலும் பார்க்க

புதுவையில் ரேஷன் அரிசி டெண்டரில் முறைகேடு: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றச்சாட்டு

புதுவையில் ரேஷன் அரிசிக்கான டெண்டா் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசுக்கு ரூ. 20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குற்றம்சாட்டினா... மேலும் பார்க்க

கடலுக்குச் சென்ற மீன்பிடி விசைப் படகுகள்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் மீனவா் படகுகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். புதுச்சேரியில் மீன்பிடித் தடைக... மேலும் பார்க்க

செவிலியா் கல்லூரியில் தேசிய மாநாடு

புதுவை ஸ்ரீமணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரியில் தேசிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. உலகளவில் தொற்றில்லாத நோய்களைக் கையாளுதலில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைந்த பயன்பாடு மற்றும் தாக்கம் என்ற தலைப்ப... மேலும் பார்க்க