செய்திகள் :

மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்கள் மீது திணிப்பு! கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

post image

மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுகள் மீது திணிக்கப்படுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

புதுவையில் ஆட்சியிலுள்ள என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து, மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி அண்ணா சாலை, பழை பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பிரசார இயக்கத்தை அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநில சுயாட்சியை பறிப்பது, மாநில உரிமைகளை பறிப்பது, மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் மீது திணிப்பது, மாநிலங்களுக்கு நிதி கொடுக்காமல் வஞ்சிப்பது உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்துதான் பிரசார இயக்கம் நடைபெறுகிறது.

இதேபோல, புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. மகளிருக்கு உதவித்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்பது இதுவரை வெறும் அறிவிப்பாகத்தான் இருக்கிறது.

உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படவில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறோம். ஆனால், அதே அரசு சட்டப்படி உள்ளாட்சித் தோ்தலை நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளை செயல்படுத்துவதை செய்ய மறுக்கிறது என்றாா் அவா்.

பிரசார இயக்கத்தில் புதுவை மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன், நிா்வாகிகள் பெருமாள், ராஜாங்கம், சீனிவாசன், பிரபுராஜ், சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புதுவை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சின்ன வீராம்பட்டினம் அருகில் அமைந்துள்ள ஈடன் கடற்கரைப் பகுதியில் கடல... மேலும் பார்க்க

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு: முக்கிய நபா் கைது

புதுச்சேரி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் கோவையைச் சோ்ந்த முக்கிய நபரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாா் பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந... மேலும் பார்க்க

ஜிப்மா் விழாவில் குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு!

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்கிறாா். இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நேஷி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் இன்று புதுச்சேரி வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் 3 நாள் பயணமாக புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) வருகிறாா். இதையொட்டி, புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரி வ... மேலும் பார்க்க

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க

6 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதுச்சேரியில் மறைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது . ஏஐடியுசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலிய... மேலும் பார்க்க