செய்திகள் :

ENG vs IND: "இந்தியாவின் முன்னணி வீரர் என்னை ஓய்வுபெறச் சொன்னார்; காரணம்..." - பகிரும் கருண் நாயர்

post image

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2016-ல் அறிமுகமாகி, முதல் தொடரிலேயே முச்சதம் அடித்த கருண் நாயர் அடுத்த 6 மாதங்களிலேயே அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.

அதன்பிறகு அணியில் இடம்பிடிக்க கடுமையாகப் போராடிய கருண் நாயருக்கு கடந்த 7 ஆண்டுகளாக வெறும் ஏமாற்றம்தான்.

இருப்பினும், முயற்சியைக் கைவிடாத கருண் நாயர் கடந்த ஓராண்டாக உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், சச்சின் உள்ளிட்ட பிரபல வீரர்கள் தாமாக முன்வந்து பாராட்டினர்.

கருண் நாயர்
கருண் நாயர்

மார்ச்சில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியில் கருண் நாயர் இடம்பெற வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர்கள் வலியுறுத்தினர்.

ஆனால், அப்போது வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், ஐ.பி.எல்லில் டெல்லி அணியில் சிறப்பாக கருண் நாயர் விளையாடிக்கொண்டிருந்தபோது இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவரின் பெயரைச் சேர்த்து பி.சி.சி.ஐ தேர்வுக்குழு.

அதன்படி, இங்கிலாந்து சென்ற கருண் நாயர் ஏற்கெனவே கவுண்டியில் ஆடிய அனுபவத்துடன், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.

அடுத்ததாக வெள்ளிக்கிழமை (ஜூன் 20) 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கத் தயாராக இருக்கிறார்.

இந்த நிலையில், இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காமலிருந்த சமயத்தில் ஒரு முன்னணி வீரர் தன்னை ஓய்வுபெறச் சொன்னதாக கருண் நாயர் கூறியிருக்கிறார்.

சர்பராஸ் கானுடன் கருண் நாயர்
சர்பராஸ் கானுடன் கருண் நாயர்

டெய்லி மெயில் ஊடகத்திடம் இதனைப் பகிர்ந்த கருண் நாயர், "இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர் எனக்கு போன் செய்து 'நீங்கள் ஓய்வு பெறுங்கள்' என்று என்னிடம் கூறியது இன்றும் எனக்கு நியாபகம் இருக்கிறது.

ஏனெனில், லீக் போட்டிகளில் வரும் பணம் என்னைப் பாதுகாப்பாக வைக்கும் என்பதால் அப்படிச் சொன்னார்.

அவ்வாறு செய்வது எளிதாக இருந்திருக்கும். ஆனால், பணம் எதுவாக இருந்தாலும், அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுப்பதென்பது என்னை நானே தள்ளிவிடுகிறேன் என்று எனக்குத் தெரியும்.

இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதை ஒருபோதும் நான் கைவிடப்போவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்தோம், இப்போது எங்கிருக்கிறோம் என்று பாருங்கள்." என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

WTC: "டெஸ்ட் சாம்பியன்ஷிபை விட IPL முக்கியமா?" - ஹேசல்வுட் மீது கேள்வி எழுப்பிய ஆஸி., முன்னாள் வீரர்

வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் தேசிய கிரிக்கெட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைத் தாண்டி IPL-ல் கவனம் செலுத்தியதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் சாடியுள்ளார். சமீபத்தில் நடந்து... மேலும் பார்க்க

"2011 உலகக் கோப்பைக்குப் பிறகு 7 பேரின் கரியரை பிசிசிஐ அழித்துவிட்டது" - யுவராஜின் தந்தை யோகராஜ்

தோனி தலைமையிலான இந்திய அணி 28 வருடங்களுக்குப் பிறகு 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதைத்தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியைக் கட்டமைக்கும் வேலைகள் மெல்ல மெல்ல நடந்தன.அதேசமயம், அடுத்த இரண்... மேலும் பார்க்க

"சிறுவயதிலிருந்து அவர் எனக்கு இன்ஸ்பிரேஷன்" - கோலி அல்ல தமிழக வீரரைக் குறிப்பிடும் சாய் சுதர்சன்

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் கன்சிஸ்டன்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆரஞ்சு கேப் (759 ரன்கள்) வென்றதன் மூலம், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருக்கிறார் தமிழக வீர... மேலும் பார்க்க

TNPL: தொடர் தோல்வியில் கோவை அணி... ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சேப்பாக் அணி!

டிஎன்பிஎல் பத்தாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப... மேலும் பார்க்க

South Africa: 'தென்னாப்பிரிக்காவின் சாபத்தை போக்கிய 'கருப்பு நிலா!' - 'கெத்து பவுமா!'

2015-ம் ஆண்டு உலகக்கோப்பை இன்னமும் அப்படியே நினைவில் நிற்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த உலகக்கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தோற்று நிற்கும். கிராண்ட் எலியாட் தென்... மேலும் பார்க்க

TNPL: சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி.. துஷார் ரஹேஜாவின் அதிரடி அரைசதம் வீண்

டிஎன்பிஎல் ஒன்பதாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எஸ்கேஎம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற... மேலும் பார்க்க