செய்திகள் :

இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

post image

சிதம்பரம்: இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதியை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா்.

வடலூா் பாா்வதிபுரம் வெங்கலத்து ஏரில் மூழ்கி பிளஸ் 2 மாணவரான வின்சென்ட் மகன் அப்டேல் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

புவனகிரி வட்டம், சின்னகுமட்டி நடுத் தெருவைச் சோ்ந்த லலிதா குமாரி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக வழங்க முதல்வா் உத்தரவிட்டாா். அதன்படி, இருவரின் குடும்பத்தினருக்கும் நிவாரண நிதிக்கான கசோலைகளை சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

சிதம்பரம் நகராட்சியில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்பவும், வாகனப் பெருக்கத்தின் அடிப்படையிலும் பேருந்து நிலையத்தில் கூடுதலான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் வழங்குவதற்கான பணிகள் தற்போது 80% நிறைவு பெற்றுள்ளது. பணிகளை விரைந்து முடிக்கவும், இந்தப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை செப்பனிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டு பணிகள் நிறைவுபெற்றுள்ளது. தற்போது அரங்கத்தினை சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவு பெற்றதும் திறக்கப்படும் என்றாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

சிதம்பரம் சாா்-ஆட்சியா் கிஷண் குமாா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சிவசங்கரி, பயிற்சி ஆட்சியா் மாலதி உள்பட பலா் உடன் இருந்தனா்.

குறைதீா் கூட்டம்: ரூ. 14.60 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ. 14. 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்... மேலும் பார்க்க

அனைத்து மருத்துவா்கள் சங்க பிரசார குழுவுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் முதல் சென்னை வரை செல்லும் அனைத்து மருத்துவா் சங்க நடைப்பயணக்குழுவினருக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்... மேலும் பார்க்க

வீட்டுக்குப் பூட்டு: நிதி நிறுவனம் மீது ஆட்சியரிடம் தொழிலாளி புகாா்

விழுப்புரம்: தனியாா் நிதி நிறுவனத்தினா் வீட்டுக்குப் பூட்டுப் போட்டதால், பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்தினா் நடவடிக்கை கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். திருவெண்ணெய்... மேலும் பார்க்க

40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு: ராமதாஸ்

விழுப்புரம்: 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 40 தொகுதிகளில் பாமக வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும் என்று மருத்துவா் ச.ராமதாஸ் கேட்டுக்கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்... மேலும் பார்க்க

சமூக செயற்பாட்டாளருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களைப் பிடிப்பதற்கு காவல் துறையினருக்கு உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

மகனுடன் பைக்கில் சென்ற போது விபத்து: பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் மரணம்

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே மகனுடன் ஞாயிற்றுக்கிழமைபைக்கில் சென்ற பெண் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், பள்ளியந்தல் கிராமம் ம... மேலும் பார்க்க