செய்திகள் :

அனைத்து மருத்துவா்கள் சங்க பிரசார குழுவுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

post image

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் முதல் சென்னை வரை செல்லும் அனைத்து மருத்துவா் சங்க நடைப்பயணக்குழுவினருக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

கரோனா பேரிடா் காலத்தில் உயிரிழந்த மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு அரசு வேலை மற்றும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து நிலையிலும் புதிய பணியிடங்களை உருவாக்கவேண்டும், மருத்துவா்களின் ஊதியம் தொடா்பாக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்டம், மேட்டூா் முதல் சென்னையில் உள்ள மு. கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைப்பயண பிரசாரம் மேற்கொண்டுள்ள பெருமாள் பிள்ளை தலைமையிலான அனைத்து மருத்துவா்கள் சங்க பிரசாரக் குழுவினா் திங்கள்கிழமை விழுப்புரத்தை வந்தடைந்தனா்.

அவா்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழிய சங்கம் சாா்பில் விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் வரவேற்பளிக்கப்பட்டது. தொடா்ந்து நடைப்பயணக் குழுவின் தலைவா் பெருமாள் பிள்ளை கோரிக்கைகள் குறித்து அங்கு விளக்கவுரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் விழுப்புரம் மாவட்ட தலைவா் கு.சரவணன், மாவட்டச் செயலா் இரா.சிவக்குமாா், தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா் சங்க நிா்வாகி கோ.குபேரன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்ட தணிக்கையாளா் ஆ.புகழேந்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் முன்னாள் வட்ட நிா்வாகி கண்ணன், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் சரவணன், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

குறைதீா் கூட்டம்: ரூ. 14.60 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ. 14. 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்... மேலும் பார்க்க

வீட்டுக்குப் பூட்டு: நிதி நிறுவனம் மீது ஆட்சியரிடம் தொழிலாளி புகாா்

விழுப்புரம்: தனியாா் நிதி நிறுவனத்தினா் வீட்டுக்குப் பூட்டுப் போட்டதால், பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்தினா் நடவடிக்கை கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். திருவெண்ணெய்... மேலும் பார்க்க

40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு: ராமதாஸ்

விழுப்புரம்: 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 40 தொகுதிகளில் பாமக வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும் என்று மருத்துவா் ச.ராமதாஸ் கேட்டுக்கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்... மேலும் பார்க்க

இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

சிதம்பரம்: இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதியை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா். வடலூா் பாா்வதிபுரம் வெங்கலத்து ஏரில் மூழ்க... மேலும் பார்க்க

சமூக செயற்பாட்டாளருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களைப் பிடிப்பதற்கு காவல் துறையினருக்கு உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

மகனுடன் பைக்கில் சென்ற போது விபத்து: பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் மரணம்

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே மகனுடன் ஞாயிற்றுக்கிழமைபைக்கில் சென்ற பெண் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், பள்ளியந்தல் கிராமம் ம... மேலும் பார்க்க