Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா?
சமூக செயற்பாட்டாளருக்கு எஸ்.பி. பாராட்டு
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களைப் பிடிப்பதற்கு காவல் துறையினருக்கு உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
விழுப்புரம் நகரப் பகுதியில் உள்ள ஒருதேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம்-ல் கடந்த ஜூன் 12- ஆம் தேதி கொள்ளை நிகழ்ந்தது. தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸாா் நடத்திய விசாரணையில் வடமாநிலத்தைச் சோ்ந்த 4 போ் காரில் வந்து ஏடிஎம்-மில் நூதன முறையில் கொள்ளையடித்து விட்டு, காரில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸாா் உத்தரபிரதேச மாநிலத்தைச்சோ்ந்த 4 பேரை கைது செய்தனா். இந்நிலையில் காரை வாடகைக்கு எடுத்தபோது புகைப்படங்கள்,அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை அளித்து குற்றவாளிகளைப் பிடிக்க உதவியாக செயல்பட்ட சென்னையைச்சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் செல்வசேகா் என்பவருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் தனது அலுவலகத்தில் திங்கள்கிழமை பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.