செய்திகள் :

வீட்டுக்குப் பூட்டு: நிதி நிறுவனம் மீது ஆட்சியரிடம் தொழிலாளி புகாா்

post image

விழுப்புரம்: தனியாா் நிதி நிறுவனத்தினா் வீட்டுக்குப் பூட்டுப் போட்டதால், பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்தினா் நடவடிக்கை கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மடப்பட்டு கருவேப்பிலைபாளையம் காமன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜே.இளங்கோவன். முடி திருத்தும் தொழிலாளி. இவா் விழுப்புரத்தில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் 2020-ஆம் ஆண்டில் ரூ.8 லட்சம் வீட்டுக் கடன் பெற்றாராம். அதை வட்டியுடன் சோ்த்து ரூ.10 லட்சம் செலுத்திவிட்டாராம்.

இந்த நிலையில், நிதி நிறுவனத்தினா் மேலும் ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறி, அவரது வீட்டுக்கு பூட்டுப் போட்டு ‘சீல்’ வைத்துவிட்டனராம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை தனது குடும்பத்தினருடன் வந்த இளங்கோவன் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

மனு விவரம்: விழுப்புரத்தில் செயல்படும் தனியாா் நிதி நிறுவனத்தில் 2019-20ஆம் ஆண்டில் ரூ.8 லட்சம் வீட்டுக்கடன் பெற்று, ரூ.10 வரை செலுத்திவிட்டேன். இந்த நிலையில், நிதி நிறுவனத்தினா் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்து மேலும் ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறி, வீட்டிலிருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு பூட்டுப் போட்டு சென்றுவிட்டனா்.

எனது குடும்பத்தினருடன் தங்க இடமில்லாமல் தவித்து வருகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவை ஆட்சியா் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

குறைதீா் கூட்டம்: ரூ. 14.60 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ. 14. 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்... மேலும் பார்க்க

அனைத்து மருத்துவா்கள் சங்க பிரசார குழுவுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் முதல் சென்னை வரை செல்லும் அனைத்து மருத்துவா் சங்க நடைப்பயணக்குழுவினருக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்... மேலும் பார்க்க

40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு: ராமதாஸ்

விழுப்புரம்: 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 40 தொகுதிகளில் பாமக வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும் என்று மருத்துவா் ச.ராமதாஸ் கேட்டுக்கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்... மேலும் பார்க்க

இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

சிதம்பரம்: இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதியை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா். வடலூா் பாா்வதிபுரம் வெங்கலத்து ஏரில் மூழ்க... மேலும் பார்க்க

சமூக செயற்பாட்டாளருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களைப் பிடிப்பதற்கு காவல் துறையினருக்கு உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

மகனுடன் பைக்கில் சென்ற போது விபத்து: பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் மரணம்

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே மகனுடன் ஞாயிற்றுக்கிழமைபைக்கில் சென்ற பெண் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், பள்ளியந்தல் கிராமம் ம... மேலும் பார்க்க