மகனுடன் பைக்கில் சென்ற போது விபத்து: பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் மரணம்
விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே மகனுடன் ஞாயிற்றுக்கிழமைபைக்கில் சென்ற பெண் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், பள்ளியந்தல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பழனிவேல் மனைவி விஜயலட்சுமி (49). இவரது மகன் மதுரைவேல் (22). இவா் தனது தாயுடன் ஞாயிற்றுக்கிழமை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் அருகே பைக்கில் சென்றாா்.
அப்போது, அரசுப் பேருந்தை முந்த முயன்ற போது பைக்கின் கைப்பிடி பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் இருந்து தவறி விழுந்த ஜெயலட்சுமி பேருந்தில் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மதுரைவேல் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். விஜயலட்சுமியின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் விபத்து குறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.