Seeman: பனை மரம் ஏறி, 'கள்' இறக்கிய சீமான் - புகைப்பட தொகுப்பு
கடைசி டி20: 20 சிக்ஸர்கள் விளாசிய மே.இ.தீவுகள்; அயர்லாந்துக்கு இமாலய இலக்கு!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூன் 15) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: கவாஜாவின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதா? ஆஸி. பயிற்சியாளர் பதில்!
சிக்ஸர் மழை பொழிந்த மே.இ.தீவுகள்
முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் சிக்ஸர் மழையைப் பொழிந்தனர்.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய எவின் லீவிஸ் 44 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
Our 2nd highest T20I total!
— Windies Cricket (@windiescricket) June 15, 2025
All set to defend a big total for a series win!#IREvWIpic.twitter.com/S8ktskDWRd
கீஸி கார்ட்டி 22 பந்துகளில் 49 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தும், ரோமாரியோ ஷெப்பர்டு 6 பந்துகளில் 19 ரன்கள் (3 சிக்ஸர்கள்) எடுத்தும் களத்தில் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி மொத்தமாக 20 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்கள் விளாசினர்.
இதையும் படிக்க: டேவிட் வார்னரின் இடத்துக்கு மாற்று வீரர் இல்லை; முன்னாள் ஆஸி. கேப்டன் அதிருப்தி!
அயர்லாந்து தரப்பில் மேத்யூ ஹம்ப்ரேஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்க் அடாய்ர், பேரி மெக்கார்த்தி மற்றும் பெஞ்சமின் ஒயிட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.