செய்திகள் :

"ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல்; அந்த திருஷ்டிதான் நடக்கும் சம்பவங்களுக்குக் காரணம்"-அன்புமணி பேச்சு

post image

முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பாமக நிறுவனர் ராமதாஸ் 'கடைசி மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்' என்று அறிவித்து தனது மகன் அன்புமணி தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதாக குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

இதையடுத்து தந்தையர் தினமான இன்று (ஜூன் 15)  திருவள்ளூரில் பாமக பொதுக்குழு கூட்டத்தில், "இன்று தந்தையர் தினம். மருத்துவர் ஐயா உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மருத்துவர் ஐயா நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மன நிம்மதி, மகிழ்ச்சியோடு 100 ஆண்டுகள் வாழ வேண்டும். அது மகனாக என்னுடைய கடமை." என்று பேசியிருந்தார்.

அன்புமணி - ராமதாஸ்
அன்புமணி - ராமதாஸ்

`கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள்; இது நீங்கள் உருவாக்கிய கட்சி'- ராமதாஸ் குறித்து பேசிய அன்புமணி

இப்படியாக ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் பாமக'வில் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், "நம் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல்; அந்த வயித்தெறிச்சலில் வந்த திருஷ்டிதான் கட்சியில் தற்போது நடக்கும் சம்பவங்கள். ஆனாலும் அந்த திருஷ்டி எல்லாம் போய்விட்டது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

”எல்லா மாநிலங்களிலும் கள் இறக்க அனுமதி உள்ளபோது, தமிழகத்தில் மட்டும் தடை ஏன்?”- சீமான் கேள்வி!

நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மதுபானங்களை தமிழ்நாடு... மேலும் பார்க்க

Seeman: பனை மரம் ஏறி, 'கள்' இறக்கிய சீமான் - புகைப்பட தொகுப்பு

தூத்துக்குடியில் பனை மரம் ஏறி கள் இறக்கிய சீமான்.! மேலும் பார்க்க

Sonia Gandhi: 'திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி!' - காரணம் என்ன?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி நேற்று (15.06.25) டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சோனியா காந்தி... மேலும் பார்க்க

``Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? அடுத்தது ஆடு, மாடுகளுக்கு மாநாடு" - சீமான்

கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கி அருந்தினார் இன்று. நாதக'வின் உழவர் பாசறை சார்பில்... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரானுக்கு இடையே தொடரும் தாக்குதல்கள்; யாருக்கு எவ்வளவு பாதிப்புகள்?

'ஆபரேஷன் ரைஸிங் லயன்' என்கிற பெயரில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) நள்ளிரவில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு எதிர்வினையாக, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் நடத்துகிறது. இந்தத் தாக்கு... மேலும் பார்க்க